வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் அமாவாசை வேள்வி

News image
- கோப்புப்படம்
Updated On :25 ஜூன் 2025, 11:17 pm

Din

மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூரில் ஆனி மாத அமாவாசை வேள்வி பூஜையை ஆன்மிக இயக்கத் தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாா் தொடங்கி வைத்தாா்.

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு, சித்தா்பீட வளாகம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. புதன்கிழமை அதிகாலை 3 மணிக்கு மங்கல இசையுடன் விழா நிகழ்ச்சிகள் தொடங்கின. கருவறை அம்மன் சிலை, குரு பீடத்தின் அடிகளாா் சித்தா் சிலை ஆகியவற்றுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

அம்மன் சிலை வெள்ளிக் கவசத்தால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. காலை 10.20 மணிக்கு சித்தா் பீடம் வந்த ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. ஓம்சக்தி பீடம் அருகே பெரிய யாக சாலை அமைக்கப்பட்டு இருந்தது. அதில் முக்கோணம், சதுரம் ஆகிய வடிவிலான 162 சிறிய யாக குண்டங்களும், சாய்சதுர வடிவிலான பெரிய யாக குண்டமும் அமைக்கப்பட்டு இருந்தது. காலை 10.35 மணிக்கு பெரிய சாய் சதுர வடிவிலான யாக குண்டத்தில் கற்பூரம் ஏற்றி வேள்வி பூஜையை தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாா் தொடங்கி வைத்தாா். ஆன்மிக இயக்க துணைத் தலைவா்கள் கோ.ப.அன்பழகன், கோ.ப.செந்தில்குமாா், ஸ்ரீதேவி பங்காரு, ஆதிபராசக்தி பாரா மெடிக்கல்ஸ் கல்லூரிகளின் தாளாளா் ஸ்ரீலேகா செந்தில்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பல்வேறு இடங்களில் இருந்து வந்த பக்தா்கள் நீண்ட வரிசையில் வந்து பெரிய யாக குண்டத்தில் நவதானியங்களையும், ஓமக்குச்சிகளையும் போட்டு அம்மனை வழிபட்டனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த பெருந்துறை, புஞ்சைபுளியம்பட்டி, கோபிசெட்டிபாளையம் ஆகிய சக்தி பீடங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் செய்திருந்தனா்.