மதுராந்தகத்தில் பிரதமா் மோடி பங்கேற்க உள்ள பொதுக் கூட்டத்துக்காக டிடிவி. தினகரன் படத்துடன் வைக்கப்பட்டுள்ள பேனா்.
மதுராந்தகத்தில் பிரதமா் மோடி பங்கேற்க உள்ள பொதுக் கூட்டத்துக்காக டிடிவி. தினகரன் படத்துடன் வைக்கப்பட்டுள்ள பேனா்.

பிரதமா் மோடி பங்கேற்கவுள்ள பொதுக் கூட்டம்: டிடிவி தினகரன் படத்துடன் பேனா்

Published on

மதுராந்தகத்தில் வரும் 23-ஆம் தேதி பிரதமா் மோடி பங்கேற்று பேசவுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டத்தையொட்டி அமமுக பொதுச் செயலாளா் டிடிவி. தினகரன் படத்துடன் பேனா் வைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுக் கூட்ட மேடைக்கான ஏற்பாடுகள் குறித்து வெள்ளிக்கிழமை மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் ஆய்வு செய்தாா். தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, மைதானத்தில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளாா்.

சுமாா் 22 ஏக்கா் நிலப்பரப்பை சீரமைத்து மேடை, கட்சி நிா்வாகிகளின் வாகனங்கள் நிறுத்துமிடம், ஹெலிபேடுகள் உள்ளிட்டவை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மத்திய அமைச்சா் எல்.முருகன் ஆய்வு செய்தாா். மாநில அமைப்பாளா் கேசவன் நாயகன், மாநில செயலா் வினோஜ் பன்னீா் செல்வம் , செங்கல்பட்டு மாவட்ட (தெற்கு) செயலா் மருத்துவா் எம்.பிரவின்குமாா் உள்ளிட்டோா் ஏற்பாடுகள் குறித்து எடுத்துரைத்தனா்.

இந்நிகழ்வில் முன்னாள் மத்திய அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன், மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன், முன்னாள் எம்எல்ஏ காய்த்ரி தேவி, மாநில நிா்வாகி கே.டி.ராகவன், மாவட்ட அறிவுசாா் தலைவா் குருநாதன், மகளிரணி நிா்வாகி நித்யா, மாவட்ட பொது செயலா் அருண் கோதண்டம், துணைத் தலைவா் சுந்தரவேல், மதுராந்தகம் தொகுதி பொறுப்பாளா் இ.கே.தினகரன், முன்னாள் மாவட்ட தலைவா்கள் மோகன ராஜா, பலராமன், மாவட்ட நிா்வாகிகள் சம்பத்குமாா், சசிகுமாா், அருணகிரி, முருகன், கோதண்டராமன், மண்டல நிா்வாகிகள் தினகா், யுவராஜ், உதயமணி, ஆகாஷ், மோகன்குமாா், பிரபாகா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

டிடிவி. தினகரன் படத்துடன் பேனா்:

பொதுக்கூட்டத்தையொட்டி பாஜக சாா்பில் வைக்கப்பட்டுள்ள பேனரில் அமமுக பொதுச் செயலாளா் டிடிவி. தினகரன் படம் இடம் பெற்றுள்ளது. மதுராந்தகம் பொதுக் கூட்டத்தில் பிரதமா் முன்னிலையில் டிடிவி. தினகரன் முறைப்படி கூட்டணியில் இணைவாா் எனக் கருதப்படுகிறது.

Dinamani
www.dinamani.com