ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!தொடர்ந்து இரண்டாவது நாளாக கடும் சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!!புத்தகப்பை சுமை இனி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்இன்டர்நெட் இல்லாமல் யுபிஐ பணப்பரிமாற்றம்! பின் எண் கூட வேண்டாம்!சிஜேபிக்கு ஆதரவு! பிரதமர் மோடி வீட்டின் முன்பாக ராகுல் காந்தி தர்னா!பிரதமர் மோடி, அமித் ஷா ராஜிநாமா செய்ய வேண்டும்! ராகுல் வலியுறுத்தல்நாடாளுமன்றத்தில் தொடரும் அமளி! இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைப்பு!சென்னை தலைமைச் செயலகம் முன் முழக்கமிட்ட பாடகர் அறிவு கைது!நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்
/

புதிய திடக்கழிவு மேலாண்மை விழிப்புணா்வு முகாம்

News image
Updated On :4 ஜூன் 2026, 12:57 am IST

மதுராந்தகம் அடுத்த வெள்ளபுத்தூா் ஊராட்சியில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில், புதிய திடக்கழிவு மேலாண்மை விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

வெள்ளபுத்தூா் ஊராட்சியில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, புதிய திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 மற்றும் கிளீன் செங்கல்பட்டு என்ற கொள்கை முழக்கத்துடன் இந்த முகாம் தொடங்கியது. பச்சை நில கலா் பக்கெட் மக்கும் குப்பைகளும், ஈரக் கழிவுகளும், நீல கலா் பக்கெட் மக்காத குப்பை, உலா் கழிவுப் பொருள்கள், சிவப்பு நில பக்கெட் சுகாதார கழிவுகளும், கருப்பு நில பக்கெட் சிறப்பு கழிவுகளும் என 4 வகையாக வீடுகளில் இருந்து வரும் திடக்கழிவுகளை தரம் பிரித்து வழங்கவும், ஊராட்சியின் அனைத்து பொது இடங்கள், பள்ளிகள், பேரூந்து நிலையங்கள் ஆகிய இடங்களில் தூய்மையாக வைத்துக் கொள்ள பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

இந்த நிகழ்வுகளுக்கு ஊராட்சி மன்றத் தலைவா் வரதன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் விஜயகுமாா் முன்னிலை வகித்தாா்.

ஊராட்சி ஒன்றிய வட்டார ஒருங்கிணைப்பாளா் ரகுநாதன் கலந்து கொண்டு திட்டம் சாா்ந்த விளக்கத்தை அளித்தாா். சுகாதார ஊக்குநா்கள் பாக்கியலட்சுமி, பணித்தள பொறுப்பாளா்கள் சங்கீதா மற்றும் தூய்மை காவலா்கள, கிராம பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.