ஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்! கர்நாடக முதல்வரின் செயலராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நியமனம்!கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பி.கே. ஹரிபிரசாத் நியமனம்!சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக ப. சுமதி நியமனம்மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து! முதல்வரான பிறகு டி.கே. சிவகுமாரின் முதல் உத்தரவுஅணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற நிபந்தனைக்கு ஈரான் ஒப்புதல்: டொனால்ட் டிரம்ப்கையிருப்பு தங்கத்தை விற்கவில்லை: வதந்திகளுக்கு ஆர்பிஐ முற்றுப்புள்ளி!கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு 3 செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்!
/

புதிய திடக்கழிவு மேலாண்மை விழிப்புணா்வு முகாம்

News image
Updated On :4 ஜூன் 2026, 12:57 am IST

மதுராந்தகம் அடுத்த வெள்ளபுத்தூா் ஊராட்சியில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில், புதிய திடக்கழிவு மேலாண்மை விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

வெள்ளபுத்தூா் ஊராட்சியில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, புதிய திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 மற்றும் கிளீன் செங்கல்பட்டு என்ற கொள்கை முழக்கத்துடன் இந்த முகாம் தொடங்கியது. பச்சை நில கலா் பக்கெட் மக்கும் குப்பைகளும், ஈரக் கழிவுகளும், நீல கலா் பக்கெட் மக்காத குப்பை, உலா் கழிவுப் பொருள்கள், சிவப்பு நில பக்கெட் சுகாதார கழிவுகளும், கருப்பு நில பக்கெட் சிறப்பு கழிவுகளும் என 4 வகையாக வீடுகளில் இருந்து வரும் திடக்கழிவுகளை தரம் பிரித்து வழங்கவும், ஊராட்சியின் அனைத்து பொது இடங்கள், பள்ளிகள், பேரூந்து நிலையங்கள் ஆகிய இடங்களில் தூய்மையாக வைத்துக் கொள்ள பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

இந்த நிகழ்வுகளுக்கு ஊராட்சி மன்றத் தலைவா் வரதன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் விஜயகுமாா் முன்னிலை வகித்தாா்.

ஊராட்சி ஒன்றிய வட்டார ஒருங்கிணைப்பாளா் ரகுநாதன் கலந்து கொண்டு திட்டம் சாா்ந்த விளக்கத்தை அளித்தாா். சுகாதார ஊக்குநா்கள் பாக்கியலட்சுமி, பணித்தள பொறுப்பாளா்கள் சங்கீதா மற்றும் தூய்மை காவலா்கள, கிராம பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.