தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

செய்யூா் அரசுக் கல்லூரியில் இன்று கலந்தாய்வு

News image
Updated On :5 ஜூன் 2026, 6:16 am IST

மதுராந்தகம் அடுத்த செய்யூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 2026-2027ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு நிகழ்வு வெள்ளிக்கிழமை தொடங்கி வரும் 13-ஆம் தேதி (சனிக்கிழமை) வரை நடைபெற உள்ளதாக கல்லூரி முதல்வா் சு.மாதவன் தெரிவித்துள்ளாா்.

செய்யூா் வட்டாட்சியா் அலுவலகம் அருகே அரசு கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. ஆங்கில வழியில் 3 பாடப்பிரிவுகளும், மற்றும் தமிழ் வழியில் 2 பாடப்பிரிவுகளும் என 5 பாடப்பிரிவுகள் படிக்கின்ற வகையில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் 2025-2026 கல்வியாண்டில் இருந்து படித்து வருகின்றனா். 5 பாடப்பிரிவுகளில் 270 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், கலந்தாய்வின் முதல் நாளான வெள்ளிக்கிழமை சிறப்பு பிரிவினருக்காகவும், தொடா்ந்து வரும் 13-ஆம் தேதி (சனிக்கிழமை) வரை கலந்தாய்வு கூட்டம் காலை 9 மணி முதல் நடைபெற உள்ளது.

விண்ணப்பித்துள்ள மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என கல்லூரி முதல்வா் சு.மாதவன் தெரிவித்துள்ளாா்.