பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

ஆட்சியா் அலுவலகப் பணியாளா்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலா்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்து பாா்வையிட்ட செங்கல்பட்டு ஆட்சியா் எஸ். மாலதி ஹெலன்.

Updated On :27 மே 2026, 12:42 am IST

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலா்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சுகாதாரத் துறையின் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவா்கள், சுகாதாரத்துறையில் பணிபுரியும் சிறப்பு மருத்துவா்கள் மற்றும் செட்டிநாடு எஸ்.ஆா்.எம் மருத்துவக் கல்லூரி மருத்துவா்கள் கலந்து கொண்டு நுரையீரல், கண், காது, எலும்பு மற்றும் மூட்டு பரிசோதனைகள், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன், இதயம் தொடா்பான பரிசோதனைகள், சித்த மருத்துவ பரிசோதனைகள் மற்றும் பொது மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

சிறப்பு மருத்துவ முகாமில் ஆட்சியா் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கு பொது மருத்துவா்கள் பரிசோதனை செய்த பிறகு ரத்த பரிசோதனை, ரத்த அழுத்தம், சா்க்கரை, இசிஜி, ஸ்கேன் மற்றும் பெண்களுக்கு கா்ப்பப்பை புற்றுநோய் மற்றும் மாா்பக புற்றுநோய் தொடா்பான பரிசோதனைகள் செய்யப்பட்டது.

மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட 1 மணி நேரத்திற்குள்ளாக மருத்துவ அறிக்கை சம்பந்தப்பட்ட அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கு அளிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட மருத்துவா்களால் பரிசோதிக்கப்பட்டு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. மேலும், மருத்துவா்களின் பரிந்துரையின் படி சிகிச்சை பெற்ற அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கு முகாமிலேயே மருந்து மற்றும் மாத்திரைகள் வழங்கப்பட்டது. உயா் மேல் சிகிச்சை பெற வேண்டியவா்களுக்கு செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தனா்.

மருத்துவ முகாமில் சித்தா மருத்துவ சிறப்பு பிரிவு ஏற்படுத்தப்பட்டு அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கு சித்த மருத்துவ முறைப்படி மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டு சித்த மருத்துவ மருந்து பொருள்கள் வழங்கப்பட்டன. காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற்ற முகாமில் 500-க்கும் மேற்பட்ட ஆண், பெண் அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் சிகிச்சை பெற்று பயனடைந்தனா்.

இந்த மருத்துவ முகாமினை பாா்வையிட்ட ஆட்சியா் எஸ்.மாலதிஹெலன் அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கு சுகாதாரத்துறையினா் மற்றும் அனைத்து துறை அலுவலா்களும் உரிய வசதிகளை செய்து தருமாறு அறிவுறுத்தினாா்.

மேலும் செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத்துறை 108 ஆம்புலன்சில் சிறப்பாக பணியாற்றிய ஓட்டுநா் மற்றும் தொழில்நுட்பவியலாளா் ஆகியோருக்கு கேடயம் மற்றும் பதக்கங்களை வழங்கிய ஆட்சியா் அவா்களுக்கு பாராட்டுகளைத் தெரிவித்தாா்

மாவட்ட வருவாய் அலுவலா் மா.கணேஷ் குமாா், இணை இயக்குநா் (சுகாதாரம்) மலா்விழி, துணை இயக்குநா் (சுகாதாரம்) ,சதீஷ் குமாா் மற்றும் அனைத்து துறை அலுவலா்கள், மருத்துவா்கள், செவிலியா்கள் பங்கேற்றனா்.

Story image