எழுத்தாளர் பி.வி. கிரி காலமானார்

 சென்னை, நவ.10:   எழுத்தாளர், இலக்கியமாமணி பி.வி. கிரி (71) சென்னையில் திங்கள்கிழமை (நவ.9) மாரடைப்பால் காலமானார். அவருக்கு மனைவி, மகன் உள்ளனர். பி.வி. கிரி, தமிழக அரசின் "தமிழரசு' இதழில் 25 ஆண்டுகள் உ

 சென்னை, நவ.10:   எழுத்தாளர், இலக்கியமாமணி பி.வி. கிரி (71) சென்னையில் திங்கள்கிழமை (நவ.9) மாரடைப்பால் காலமானார். அவருக்கு மனைவி, மகன் உள்ளனர். பி.வி. கிரி, தமிழக அரசின் "தமிழரசு' இதழில் 25 ஆண்டுகள் உதவி ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றார்.

  எழுபது புத்தகங்களை எழுதிய பி.வி.கிரியின் "இதழியல்' நூல், சென்னைப் பல்கலைக்கழகத்தில் பாடநூலாக வைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்காக பல பாடல் நூல்களை எழுதியுள்ளார். இவருடைய "வேதநாயகரின் காலப்பெட்டகம்' கட்டுரை நவம்பர் 8-ம் தேதி தினமணி "தமிழ்மணி'யில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவரின் இறுதிச் சடங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தொடர்புக்கு: 044 26283633

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com