இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பராமரிப்புப் பணி: மே 2 முதல் 6 வரை ரயில் சேவையில் மாற்றம்

அரக்கோணம் ரயில் பணிமனை மேம்பாட்டுப் பணி காரணமாக அரக்கோணம் - திருத்தணி இடையே இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்கள்

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 9:53 pm

DIN

அரக்கோணம் ரயில் பணிமனை மேம்பாட்டுப் பணி காரணமாக அரக்கோணம் - திருத்தணி இடையே இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்கள் அனைத்தும் மே 2 முதல் 6-ஆம் தேதி வரை முற்றிலும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்த ரயில்கள் ரத்து செய்யப்பட்டாலும், அரக்கோணம், திருத்தணி, திருவாலங்காடு இடையே பயணியர் சிறப்பு மின்சார ரயில் இயக்கப்படும். அதேபோன்று சென்னையிலிருந்து திருவள்ளூர்/ கடம்பத்தூர் இடையே புறநகர் ரயில் இயக்கப்படும்.
ஒரு சில புறநகர் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்குப் பதிலாக சென்னை - ஆவடி, ஆவடி-வேளச்சேரி இடையே மே 2 முதல் 6-ஆம் தேதி வரை பயணியர் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். 
இன்று ரயில்கள் ரத்து: சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம், செங்கல்பட்டு - அரக்கோணம் இடையே இயக்கப்படும் பயணியர் ரயில் செவ்வாய்க்கிழமை (மே 1) ஒரு நாள் மட்டும் ரத்து செய்யப்படுகிறது. புதுச்சேரி -திருப்பதி இடையே செல்லும் பயணியர் ரயில் நண்பகல் 1.30 மணிக்கு புறப்படும். இந்த ரயில் வழக்கமாகச் செல்லும் விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம், திருத்தணி பாதையில் செல்லாமல் விழுப்புரம், திருவண்ணாமலை, காட்பாடி, மேல்பாக்கம், திருத்தணி வழியாக இயக்கப்படும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.