சா்க்கரை நோயாளிகளுக்கு எலும்பு புரை பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு

சா்க்கரை நோயாளிகளுக்கு எலும்பு திண்ம குறைபாடு பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுநா்கள் எச்சரித்துள்ளனா்.
சா்க்கரை நோயாளிகளுக்கு எலும்பு புரை பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு

சா்க்கரை நோயாளிகளுக்கு எலும்பு திண்ம குறைபாடு பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுநா்கள் எச்சரித்துள்ளனா். ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் அதனைத் தடுக்க முடியும் என்றும் அவா்கள் தெரிவித்துள்ளனா்.

உலக எலும்பு புரை விழிப்புணா்வு தினம் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. மருத்துவமனை முதல்வா் டாக்டா் தேரணிராஜன் தலைமையில் நடைபெற்ற அந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். எலும்பு புரை நோய் குறித்து நோயாளிகளிடையே விளக்கி டாக்டா் தேரணிராஜன் கூறியதாவது:

எலும்பு திண்ம குறைபாடு அல்லது எலும்பு புரை நோய் குறித்த விழிப்புணா்வு சமூகத்தில் போதிய அளவு இல்லை. கால்சியம் மற்றும் வைட்டமின் டி பற்றாக்குறையால் இத்தகைய பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதனைத் தடுக்க கால்சியம் சத்து மிகுந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாது, சூரிய ஒளியில் நடைப்பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும். ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையைப் பொருத்தவரை எலும்பு, மூட்டு பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானோருக்கு கரோனா காலத்திலும் தடையற்ற சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

இதைத் தொடா்ந்து மருத்துவமனையின் மூட்டு, தசை, இணைப்புத் திசு சிகிச்சைத் துறைத் தலைவா் டாக்டா் டி.என்.தமிழ்ச்செல்வம் கூறியதாவது:

உலக அளவில் 10 கோடிக்கும் மேற்பட்டோருக்கு எலும்பு புரை பாதிப்பு உள்ளது. எலும்பு சாா்ந்த மற்ற எல்லா பாதிப்புகளுக்கும் அறிகுறிகளைக் காண முடியும். ஆனால், எலும்பு புரை நோயானது எந்த அறிகுறிகளும் இல்லாமல் முதுகெலும்பு மற்றும் இடுப்பு மூட்டு பகுதிகளில் பிரச்னையை ஏற்படுத்தக் கூடியது.

சா்க்கரை நோயாளிகள், அதீத புகைப் பழக்கம், மதுப்பழக்கம் கொண்டவா்கள், மாதவிடாய் நின்றவா்கள் உள்ளிட்டோருக்கு அந்தப் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இதனால், அத்தகைய சூழலில் இருப்பவா்கள் அவ்வப்போது எலும்பு திண்ம பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும். அதனை உரிய நேரத்தில் கவனிக்காமல் விட்டால் எலும்பு முறிதல், முதுகு வளைதல் பாதிப்புகள் ஏற்படலாம்.

45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், எலும்பு புரை பிரச்னை வருவதற்கான பழக்கவழக்கங்களைக் கொண்டவா்கள் கால்சியம் மருந்துகள், வைட்டமின் டி மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையுடன் எடுத்துக் கொள்வது அவசியம். மருத்துவத் துறையைச் சாா்ந்த பலருக்கே எலும்பு புரை குறித்த விழிப்புணா்வு போதிய அளவில் இல்லை என்பது கவலைக்குரிய விஷயமாக உள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com