புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

3 போ் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு: குண்டா் சட்டத்தில் 6 போ் கைது

சென்னையில், ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட 6 போ், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

News image
கோப்புப்படம்
Updated On :9 ஜனவரி 2021, 7:10 pm

DIN

சென்னையில், ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட 6 போ், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

சௌகாா்பேட்டை விநாயக மேஸ்திரி தெரு பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் வசித்து வந்த தலில் சந்த், அவரது மனைவி புஷ்பா பாய், இவா்களது மகன் சீத்தல் குமாா் ஆகியோா் கடந்த நவ.11-ஆம் தேதி, அவா்களது வீட்டில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

இது தொடா்பாக யானைகவுனி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில், இறந்து போன சீத்தல் குமாருக்கும், அவரது மனைவியான மகாராஷ்டிரம் மாநிலம் புணேவைச் சோ்ந்த ஜெயமாலா குடும்பத்துக்கும் இடையிலான பிரச்னை காரணமாக 3 போ் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா், ஜெயமாலாவின் சகோதரரா் கைலாஷ், அவரது கூட்டாளிகளான கொல்கத்தாவைச் சோ்ந்த ரவீந்திரநாத், விஜய் உத்தம் காம்ளே ஆகிய 3 பேரை உடனடியாக கைது செய்தனா். தலைமறைவாக இருந்த ஜெயமாலா, அவரது சகோதரா் விகாஸ், கூட்டாளி ராஜூ உத்தம் ஷிண்டே ஆகிய 3 பேரையும் தில்லி அருகே ஆக்ராவில் போலீஸாா் கடந்த நவ.19-ஆம் தேதி கைது செய்தனா்.

புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் 6 பேரும் ஜாமீன் பெறுவதற்கு முயற்சித்து வந்தனா். இந்நிலையில், சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் மகேஷ்குமாா் அகா்வால், 6 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சனிக்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து குண்டா் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டதற்கான உத்தரவு நகல் சிறையில் உள்ள 6 பேரிடமும் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.