சென்னை காசிமேடு கடற்பகுதியில் தற்கொலைக்கு முயன்ற பெண்ணை காப்பாற்றிய காவலர்கள்

சென்னை காசிமேடு கடற்பகுதியில் தற்கொலைக்கு முயன்ற பெண்ணை துரிதமாக செயல்பட்டு காவலர்கள் காப்பாற்றினர். 
தற்கொலைக்கு முயன்ற பெண்.
தற்கொலைக்கு முயன்ற பெண்.

சென்னை காசிமேடு கடற்பகுதியில் தற்கொலைக்கு முயன்ற பெண்ணை துரிதமாக செயல்பட்டு காவலர்கள் காப்பாற்றினர். 

சென்னை காசிமேடு கடற்கரை கற்களில் கணவன், மனைவி, தம்பதியினர் இன்று பேசிக்கொண்டிருந்த நிலையில் திடீரென இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. அதில் வாக்கு, வாதங்கள் முற்றவே  மனைவியான தேவிகா(47) திடீரென கடலில் விழுந்து தற்கொலைக்கு முயன்றார்.

இதனால் அதிர்ச்சியடைந்த கணவர் சதீஷ்குமார் கதறி அழுது தனது மனைவியை காப்பாற்றும்படி சத்தமிட்டார். அப்போது அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த காவலர்கள் ராபின் ஜோசப், புவனேஸ்வரன் ஆகியோர் மீனவர்கள் உதவியுடன் கடலில் குதித்து அப்பெண்ணை காப்பாற்றினர். 

தொடர்ந்து அந்தப் பெண்ணுக்கு முதலுதவியும் அளித்தனர். கடலில் தற்கொலைக்கு முயன்ற பெண்ணை காப்பாற்றிய காவலர்கள் மற்றும் மீனவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com