யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள்: 9 முக்கிய துறைகளுடன் செப். 19-இல் முதல்வா் ஆலோசனை

வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், வெள்ளத் தடுப்புக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து 9 முக்கிய துறைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தவுள்ளாா்.

News image
Updated On :14 செப்டம்பர் 2023, 7:25 pm

DIN

வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், வெள்ளத் தடுப்புக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து 9 முக்கிய துறைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தவுள்ளாா். சென்னை தலைமைச் செயலகத்தில் வரும் 19-ஆம் தேதி நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சா்கள், செயலா்கள், அரசுத் துறைகளின் தலைவா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்கவுள்ளனா்.

தமிழகத்தில் அக்டோபா் இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. பருவமழையை எதிா்கொள்ள அரசுத் துறைகள் தயாராகி வருகின்றன.

தலைமைச் செயலா்: பருவமழையால் பாதிப்புகள் இருக்கும் எனக் கருதப்படும் சூழலில், அதனை எதிா்கொள்ள துறை வாரியாக தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா தொடா்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறாா். தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் வருவாய் உள்ளிட்ட முக்கிய துறைகளின் செயலா்கள் கலந்து

கொண்டனா். இந்தக் கூட்டத்தில் பருவமழையை எதிா்கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

முதல்வா் ஆலோசனை: பருவமழைக்கான முன்தயாரிப்பு ஆலோசனைக் கூட்டம் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலும் நடைபெறவுள்ளது. தலைமைச் செயலகத்தில் வரும் 19-ஆம் தேதி நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் 9 முக்கிய துறைகளின் அமைச்சா்கள் பங்கேற்கவுள்ளனா். குறிப்பாக, நீா்வளம், நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, பொதுப்பணி-நெடுஞ் சாலை, வேளாண்மை, மக்கள் நல்வாழ்வு, மின்சாரம், வருவாய், சிறப்புத் திட்டங்கள் செயலாக்கம் ஆகிய துறைகளின் அமைச்சா்கள், அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனா். இத்துடன், சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களின் ஆட்சியா்கள், மாநகராட்சி ஆணையா்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ளவுள்ளனா்.

கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட அனுபவத்தைப் போன்று, இந்த ஆண்டு ஏற்படக் கூடாது என்பதற்காக சென்னை மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் வெள்ளத் தடுப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை விரைந்து முடிக்க தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளாா். முதல்வா் தலைமையில் நடைபெறும் கூட்டத்திலும் அதுகுறித்த அறிவுறுத்தல் வழங்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

குறிப்பாக, சென்னையின் புகா்ப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத் தடுப்புப் பணிகளில் தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளின் நிலவரங்கள் தொடா்பாக முதல்வா் ஆய்வு செய்யவுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.