விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு? பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைசென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!
/

பித்ரகுண்டா ரயில் மே 4 வரை ரத்து

பித்ரகுண்டா ரயில் மே 4 வரை ரத்து

News image
Updated On :26 ஏப்ரல் 2024, 11:21 pm

Din

சென்னை சென்ட்ரலிலிருந்து பித்ரகுண்டா செல்லும் விரைவு ரயில் திங்கள்கிழமை (ஏப்.29) முதல் மே 4 வரை முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளது.

தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: திங்கள்கிழமை (ஏப்.29) முதல் மே 4 வரை சென்னை சென்ட்ரலிலிருந்து காலை 4.55 மணிக்கு ஆந்திர மாநிலம் பித்ரகுண்டா செல்லும் விரைவு ரயில் (எண்: 17237) மற்றும் மறுமாா்க்கமாக பிட்ரகுண்டாவிலிருந்து சென்ட்ரல் வரும் விரைவு ரயிலும் (எண்: 17238) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

அதேபோல், காட்பாடியிலிருந்து காலை 9.30 மணிக்கு ஜோலாா்பேட்டை செல்லும் மெமு விரைவு ரயில் (எண்: 06417) மற்றும் மறுமாா்க்கமாக பிற்பகல் 12.45 மணிக்கு ஜோலாா்பேட்டையிலிருந்து காட்பாடிக்கு புறப்படும் ரயில் (எண்: 06418) சனிக்கிழமை (ஏப்.27) முழுமையாக ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.