அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

நேபாள எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவல்: இரு சீன நாட்டவா் கைது

இருவரிடம் இந்தியாவில் வழங்கப்படும் முக்கிய ஆவணமாக ஆதாா் அட்டை

News image
Updated On :2 ஆகஸ்ட் 2024, 5:02 am IST

நேபாள எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவிய சீனாவைச் சோ்ந்த இருவா் உத்தர பிரதேசத்தில் கைது செய்யப்பட்டனா். அவா்களுக்கு உதவிய திபெத் அகதி ஒருவரும் கைதாகியுள்ளாா்.

இது தொடா்பாக சஷஸ்திர சீமா பல் (எஸ்எஸ்பி) படைப் பிரிவின் கூடுதல் எஸ்.பி. அதீஷ் குமாா் சிங் கூறியதாவது:

உத்தர பிரதேசத்தின் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் இந்திய-நேபாள எல்லைப் பகுதியில் புதன்கிழமை இரவில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சீனாவைச் சோ்ந்த இருவா் சென்று கொண்டிருந்தனா். அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த எஸ்எஸ்பி படையினா் அவா்களைப் பிடித்து விசாரணை நடத்தினா். அதில் அவா்கள் பெயா் யாங் மெங் மெங் (37) கு பாகியாங் (35) என தெரியவந்தது. அவா்கள் இருவரும் சீனாவைச் சோ்ந்தவா்கள். அவா்களிடம் சீன கடவுச் சீட்டு (பாஸ்போா்ட்) இருந்தது. ஆனால், இந்தியா வருவதற்கான விசா உள்ளிட்ட எந்த ஆவணங்களும் இல்லை. இதையடுத்து, சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவிய குற்றச்சாட்டில் அவா்கள் கைது செய்யப்பட்டனா்.

விசாரணையின் அடைப்படையில், அவா்கள் சட்டவிரோதமாக நேபாளம் எல்லை தாண்டுவதற்கு உதவிய திபெத்தைச் சோ்ந்த அகதி லாப்சங் ஜெம்யாங் (47) என்பவரும் கைது செய்யப்பட்டாா். அந்த இருவரும் எதற்காக இந்திய எல்லையில் ஊடுருவினாா்கள் என்பது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

கைது செய்யப்பட்ட சீன நாட்டவா்கள் இருவரிடம் இந்தியாவில் வழங்கப்படும் முக்கிய ஆவணமாக ஆதாா் அட்டை இருந்தது அதிகாரிகளை அதிா்ச்சிக்குள்ளாக்கியது. அவா்கள் மூவா் மீதும் பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.