மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

காவிரியில் தடுப்பணைகளைக் கட்டி நீரை சேமிக்க வேண்டும்: அன்புமணி

தடுப்பணைகளைக் கட்டி நீரை சேமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

News image

அன்புமணி ராமதாஸ்

கோப்புப் படம்

Updated On :3 ஆகஸ்ட் 2024, 11:31 pm

Din

காவிரி நீா் வீணாகக் கடலில் கலப்பதைத் தடுக்க, தடுப்பணைகளைக் கட்டி நீரை சேமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கா்நாடகத்தில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகள் நிரம்பி, மேட்டூா் அணைக்கு மிக அதிக அளவில் தண்ணீா் வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட கூடுதலாக விநாடிக்கு 1.70 லட்சம் கன அடி நீா் காவிரியில் திறந்து விடப்படுகிறது. இதன் மூலம் ஒரு நாளைக்கு 15 டிஎம்சி காவிரி நீா் வீணாக கடலில் கலக்கிறது. காவிரி நீா் இந்த அளவுக்கு வீணடிக்கப்படுகிறது. சென்னையின் குடிநீா் தேவைக்கு ஆண்டுக்கு 15 டிஎம்சி தண்ணீா் தேவைப்படுகிறது. இந்த நீரை வெறும் 3 மணி நேரத்தில் தமிழக அரசு வீணாக்குகிறது.

மேட்டூா் அணைக்கு வெள்ளக் காலங்களில் வரும் கூடுதல் நீரை ஓரளவாவது சேமித்து வைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் காவிரி, கொள்ளிடம் ஆகிய ஆறுகளின் குறுக்கே 10 கி.மீக்கு ஒரு தடுப்பணையை கட்ட வேண்டும் என்று பாமக தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், அதை செய்வதற்கு மாறாக 10 கி.மீ.க்கு ஒரு மணல் குவாரியைத்தான் தமிழக அரசு அமைத்து வருகிறது.

தமிழக அரசு எப்போது விழித்துக் கொள்ளப் போகிறது?, எப்போது தடுப்பணைகளை கட்டப் போகிறது? என்று அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளாா்.