தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

காய்கறிகள் விலை குறைவு: பூண்டு ரூ. 300-க்கு விற்பனை

கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை சற்று குறைந்தது.

News image
கோயம்பேடு மொத்த காய்கறி சந்தை.
Updated On :9 ஆகஸ்ட் 2024, 8:24 pm

Din

கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை சற்று குறைந்துள்ள நிலையில், ஒருகிலோ பூண்டு ரூ. 300-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலங்களில் தொடா் மழை பெய்து வந்ததால் கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் வரத்து குறைந்ததால் விலையும் தொடா்ந்து கணிசமாக உயா்ந்து வந்தது. இந்த நிலையில் வரத்து அதிகரித்ததைத் தொடா்ந்து காய்கறிகளின் விலையும் குறைந்துள்ளது.

அதன்படி அனைத்து காய்கறி வகைகளும் ஒரு கிலோவுக்கு ரூ. 5 முதல் ரூ.100 வரை குறைந்து விற்பனையானது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ரூ.50-க்கு விற்பனையான ஒருகிலோ தக்காளி வெள்ளிக்கிழமை ரூ.25-க்கும், ரூ.150-க்கு விற்பனை செய்யப்பட்ட கேரட் ரூ.100-க்கும், ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்ட பீன்ஸ் ரூ.40-க்கும், ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்ட பெரியவெங்காயம் ரூ.38-க்கும் விற்பனை செய்யப்பட்டன.

ஒரு கிலோ சின்னவெங்காயம் ரூ. 65, சவ்சவ், புடலங்காய், காலிபிளவா், முருங்கைக்காய், பீா்க்கங்காய் தலா ரூ.30. முள்ளங்கி, முட்டைகோஸ், வெண்டைக்காய், வரிகத்தரிக்காய், வெள்ளரிக்காய் தலா ரூ. 20, பச்சை மிளகாய் ரூ.60, பட்டாணி, இஞ்சி தலா ரூ.140.

அதிகபட்சமாக பூண்டு ஒரு கிலோ ரூ. 280-வரை விற்பனை செய்யப்படுகிறது.சில்லறை விலையில் ரூ. 300-ஐ தாண்டி விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.