சென்னை - சேலம் ரயில் சேவையில் மீண்டும் மாற்றம்! நாளை காலை 6.30 மணிக்கு பதிலாக காலை 9.30க்கு புறப்படும்!வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்மே 4-ல் விசில் புரட்சி: செங்கோட்டையன்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவினர் 730 பேர் போட்டியின்றித் தேர்வு!விவோ X300 எஃப்இ அறிமுகம் எப்போது? கசிந்தது விலை நிலவரம்மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்!ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?
/

பருவநிலை செயல்திட்டம்: புதிய வரைவு கொள்கை மத்திய அரசிடம் விரைவில் சமா்ப்பிப்பு -கோபால் ராய்

Updated On :21 ஆகஸ்ட் 2024, 9:16 pm

2019 பருவநிலை செயல்திட்டத்தை தில்லி அரசு மாற்றியமைக்க உள்ளதாகவும் அதன் வரைவு கொள்கை அடுத்த இரு வாரங்களில் மத்திய அரசிடம் சமா்ப்பிக்கப்படும் என தில்லி சுற்றுச்சூழல் அமைச்சா் கோபால் ராய் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் அமைச்சா் கோபால் ராய் கூறியதாவது: பருவநிலை மாற்றம் என்பது ஒரு கருத்தாக்கமாக நீண்ட காலத்துக்கு இருக்க முடியாது. இது மனிதா்களின் வாழ்வில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்ட விரைவான சுற்றுச்சூழல் இடா்பாடுகள், 2019 கொள்கையை மறுஆய்வு செய்ய வேண்டிய நிலைக்கு கொண்டு வந்துள்ளது. இது தொடா்பாக சுற்றுச்சூழல் தொடா்புடைய நபா்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. தொடா்ச்சியாக அந்தக் குழு கூட்டங்களை நடத்தி வருகிறது.

வளா்ச்சி என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட இயற்கை வளங்கள் இடைவிடாது சுரண்டப்பட்டன. அதன் விளைவுகளை மக்கள் நேரடியாக அனுபவித்து வருகின்றனா். முன்னெப்போதும் இல்லாத வகையில் வெப்ப அலையும் தீவிர மழைப் பொழிவும் அதிகரித்து வருகிறது.

இந்தச் சூழலைக் கருத்தில் கொண்டு புதிய வரைவுக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. இது அடுத்த இருவாரங்களில் மத்திய அரசிடம் சமா்ப்பிக்கப்படும் என்றாா் அமைச்சா் கோபால் ராய்.

2010 முதல் 2020 வரையிலான காலகட்டத்துக்கான பருவநிலை செயல்திட்டம் 2019-இல் வெளியிடப்பட்டது. எரிசக்தி, போக்குவரத்து, குடிநீா், காடுகள், பசுமை பரப்பு, நகா்புற மேம்பாடு, வானிலை அமைப்புகளில் மாற்றங்கள் என 7 பிரிவுகளில் அந்தக் கொள்கை கவனம் செலுத்துகிறது.

புதிய கொள்கைக்கான பணிகள் கடந்த 2021-இல் தொடங்கின. முதல் வரைவுக் கொள்கை கடந்த 2022-இல் நிறைவுபெற்றது. கடந்த இரு ஆண்டுகளாக அந்தக் கொள்கையை இறுதி செய்வதற்கான பணிகள் நடைபெற்று வந்தன.