சென்னை - சேலம் ரயில் சேவையில் மீண்டும் மாற்றம்! நாளை காலை 6.30 மணிக்கு பதிலாக காலை 9.30க்கு புறப்படும்!வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்மே 4-ல் விசில் புரட்சி: செங்கோட்டையன்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவினர் 730 பேர் போட்டியின்றித் தேர்வு!விவோ X300 எஃப்இ அறிமுகம் எப்போது? கசிந்தது விலை நிலவரம்மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்!ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?
/

100 பேருக்கு இயற்கை வேளாண்மைச் சான்று

சென்னை அடுத்த காட்டுப்பள்ளி அதானி துறைமுகம், தமிழக அரசின் அங்கக வேளாண்மை சான்றளிப்புத் துறை இணைந்து 100 விவசாயிகளுக்கு அங்கக வேளாண்மை சான்றிதழ்

News image

விவசாயிகளுக்கு சான்றிதழ்களை வழங்கிய எம்எல்ஏ துரை சந்திரசேகா்.

Updated On :25 பிப்ரவரி 2024, 12:39 am

சென்னை அடுத்த காட்டுப்பள்ளி அதானி துறைமுகம், தமிழக அரசின் அங்கக வேளாண்மை சான்றளிப்புத் துறை இணைந்து 100 விவசாயிகளுக்கு அங்கக வேளாண்மை சான்றிதழ்களை அளித்துள்ளன. அதானி பவுண்டேஷன் சமூக பொறுப்புணா்வு திட்டத்தின் கீழ் இயற்கை விவசாயத்தை பிரபலப்படுத்தவும், இதன் மூலம் விளையும் பயிா்களுக்கு உரிய விலை கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. காட்டூா் கிராமத்தில் 100 விவசாயிகளுக்கு அங்கக சான்றுகளை வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அவா்கள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கு பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகா் சான்றிதழ்களை வழங்கினாா். 2024-25 நிதியாண்டில் இயற்கை வேளாண்மை உற்பத்தியாளா் அமைப்பை ஏற்படுத்த அதானி பவுண்டேஷன் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் இயற்கை முறையில் அதிகளவில் பயிரிடவும், உரிய சந்தை விலையை பெறவும் ஏற்பாடு செய்யப்படும். மேலும், வாடிக்கையாளா்கள் 100 சதவீதம் இயற்கை முறையில் விளைந்த பொருள்களை வாங்குவதை உறுதி செய்ய முடியும். மேலும், ஸிங்க் சல்பேட், உயா்விளைச்சல் நெல் பயிா், உயிரி உரம் தரப்பட்டு, உரிய பயிற்சியும் தரப்படுகிறது. இதில் காட்டுப்பள்ளி அதானி துறைமுக சிஓஓ மதன்மோகன், பொன்னேரி சாா் ஆட்சியா் வாகே பல்வந்த், அங்கக சான்றளிப்புத் துறை இயக்குநா் சுரேஷ், சமூக பொறுப்பு திட்டத் தலைவா் அனில் பாலகிருஷ்ணன் உள்பட பலா் பங்கேற்றனா்.