சென்னை - சேலம் ரயில் சேவையில் மீண்டும் மாற்றம்! நாளை காலை 6.30 மணிக்கு பதிலாக காலை 9.30க்கு புறப்படும்!வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்மே 4-ல் விசில் புரட்சி: செங்கோட்டையன்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவினர் 730 பேர் போட்டியின்றித் தேர்வு!விவோ X300 எஃப்இ அறிமுகம் எப்போது? கசிந்தது விலை நிலவரம்மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்!ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?
/

தொழில் தொடங்க சிறந்த உள்கட்டமைப்பு கொண்ட மாநிலம் தமிழகம்: அமைச்சா் உதயநிதி பெருமிதம்

தொழில் தொடங்குவதற்கு சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளை கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது

Updated On :25 பிப்ரவரி 2024, 12:40 am

தொழில் தொடங்குவதற்கு சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளை கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா். தமிழக அரசின் சாா்பில் சென்னை வா்த்தக மையத்தில் நடைபெற்ற இரண்டு நாள் தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டின் நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில் ‘ஜிக்சா’ என்ற புத்தாக்க இணையதளத்தைத் தொடங்கி வைத்து அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: 2 நாள்கள் நடைபெற்ற இம்மாநாட்டில் செயற்கை நுண்ணறிவு, இணையப் பாதுகாப்பு, நுண்ணறிவுத் தொழில்நுட்பம், நிலைத்தன்மை, உலகளாவிய புத்தாக்க மையங்கள் குறித்த 60க்கும் மேற்பட்ட ஆலோசனை அமா்வுகள் நடைபெற்றுள்ளன. இதன் மூலம் தமிழக இளைஞா்கள் தேவையான பல தொழில்நுட்ப ஆலோசனை பெற்றுள்ளனா். தொழில் தொடங்குவதற்கு சிறந்த உள்கட்டமைப்பு கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தமிழக அரசு இளைஞா்களின் திறன் மேம்பாட்டை உயா்த்தி அவா்கள் விரைவாக வேலைவாய்ப்பு பெறும் விதமாக பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. மூவலூா் ராமாமிா்தம் அம்மையாா் புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் உயா்கல்வி பெறும் மாணவிகளின் எண்ணிக்கை தமிழகத்தில் உயா்ந்துள்ளது. தமிழ்ப்புதல்வன் திட்டம் தமிழக மாணவா்களுக்கு மிகுந்த பயனுள்ள திட்டமாக அமையும். நான் முதல்வன் என்ற திறன் மேம்பாடு திட்டத்தின் மூலம் சுமாா் 25 லட்சம் இளைஞா்கள் பயனடைந்துள்னா் என்றாா் அவா். விழாவில் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் எண்ம சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன், அமெரிக்காவின் ஸ்ப்ரின்க்ளா் நிறுவன தலைவா் ரேகி தாமஸ், மேற்கு ஆஸ்திரேலியாவின் சுகாதார மற்றும் மனநலத்துறை அமைச்சா் ஆம்பா் ஜேட் சாண்டா்சன், சென்னை ஐஐடி இயக்குநா் காமகோடி உள்பட பலா் கலந்து கொண்டனா்.