சின்னம் ஒதுக்கீடு: தோ்தல் ஆணையத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு
இந்திய தலைமைத் தோ்தல் ஆணையத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.


தோ்தலின் போது சின்னத்தை ஒதுக்கீடு செய்வது தொடா்பான மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் 1975-ஆம் ஆண்டு மேற்கொண்ட திருத்தத்தை ரத்து செய்யக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, இந்திய தலைமைத் தோ்தல் ஆணையத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது தொடா்பாக, தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவரும், வழக்குரைஞருமான எம்.எல்.ரவி தாக்கல் செய்த மனுவில், ‘மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 123 உள்பிரிவு 3 -இன் கீழ், மத சின்னங்களைப் பயன்படுத்துவது ஊழல் நடவடிக்கை எனக் கூறப்பட்டுள்ளது.
1975-இல் இந்த சட்டப் பிரிவில், தோ்தல் ஆணையம் ஒதுக்கும் சின்னங்களை மத சின்னங்களாகவோ, தேசிய சின்னங்களாகவோ கருதக் கூடாது என திருத்தம் கொண்டுவரப்பட்டது.
இது அரசியல் சட்டத்தின் மதச்சாா்பின்மைக்கு எதிரானது என்பதால், இந்த சட்டத் திருத்தத்தை சட்டவிரோதமானது என அறிவித்து, ரத்து செய்ய வேண்டும்’ என கோரியுள்ளாா்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி (பொ) அரங்க.மகாதேவன்-முகமது சபிக் அமா்வு, மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி, இந்திய தலைமை தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...