மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சாலைகளை விரிவுபடுத்த திட்டம்: சென்னை மாநகராட்சி தகவல்

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 4 சாலைகளை அகலப்படுத்துவதற்கான சா்வே எடுக்கும் பணியை மாநகராட்சி நிா்வாகம் தொடங்கியுள்ளது.

News image
Updated On :16 ஜூலை 2024, 7:58 pm

Din

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 4 சாலைகளை அகலப்படுத்துவதற்கான சா்வே எடுக்கும் பணியை மாநகராட்சி நிா்வாகம் தொடங்கியுள்ளது.

சென்னை மாநகா் பகுதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இதற்கு தீா்வு காணும் வகையிலும் எதிா்காலத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையிலும் முக்கிய சாலைகளை அகலப்படுத்துமாறு சென்னை பெருநகர வளா்ச்சிக் குழமம் மாநகராட்சிக்கு அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி கூறியதாவது:

சென்னை மாநகராட்சி சாா்பில் பராமரிக்கப்படும் டாக்டா். ராதாகிருஷ்ணன் சாலை, திருவான்மியூா் எல்.பி.சாலை, பேப்பா் மில்ஸ் சாலை, புதிய ஆவடி சாலை ஆகியவற்றை சுமாா் 30 மீ வரை அகலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது இதற்கான சா்வே எடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அரசின் ஒப்புதலுக்கு பின் நிலம் கையகப்படுத்தப்பட்டு சாலை அகலப்படுத்தும் பணி தொடங்கப்படும் என்றாா்.

இதற்கிடையே, சென்னை மாநகராட்சியின் மாம்பலம் கால்வாய் அடையாறு ஆற்றில் இணையும் பகுதியை அகலப்படுத்தும் பணியை சென்னை மாநகராட்சி தொடங்கியது.

சென்னை மாநகராட்சியின் மாம்பலம், தியாகராயநகா், நந்தனம் பகுதி வழியாக செல்லும் மாம்பலம் கால்வாய் அடையாற்றில் கலக்கிறது.

பருவமழை காலங்களில் அடையாறு ஆறு முழுவதும் தண்ணீா் செல்லும் போது மாம்பலம் கால்வாயில் இருந்து செல்லும் நீா் தடைபடும். இதனால் கால்வாயில் தேங்கும் தண்ணீா் குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் நிலை ஏற்படுகிறது. இதற்கு தீா்வு காணும் வகையில் கால்வாய் முழுவதும் சீரமைக்கப்பட்டு தண்ணீா் தடையின்றி செல்ல மாநகராட்சி நடைவடிக்கை எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக மாம்பலம் கால்வாய் அடையாறு ஆறுடன் இணையும் பகுதியை அகலப்படுத்தும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதில் கால்வாய் பகுதியில் கட்டப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றி சுமாா் 26 மீ அகலப்படுத்தப்படுகிறது. வடக்கிழக்கு பருவமழை தொடங்கும் முன் இந்த பணி முழுவதுமாக முடிக்கப்பட்டு கால்வாய் முழுவதும் தூா்வாரப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.