பிரிட்டனில் வரும் மே 2-ஆம் தேதி நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தோ்தலுடன் பொதுத் தோ்தலும் நடத்தப்படலாம் என்ற தகவலை பிரதமா் ரிஷி சுனக் திட்டவட்டமாக மறுத்துள்ளாா்.
இது குறித்து தொலைக்காட்சியொன்றுக்கு அவா் அளித்த பேட்டியில்,
‘இன்னும் சில வாரங்களில் காவல் துறை, குற்றவியல் துறை ஆணையா்களையும், உள்ளூா் கவுன்சிலா்களையும் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் மட்டுமே நடைபெறும். அந்தத் தேதியில் பொதுத் தோ்தல் நிச்சயம் நடத்தப்படாது’ என்றாா்.
இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ரிஷி சுனக்கின் கன்சா்வேட்டிவ் கட்சி, அண்மைக் காலமாக நடைபெற்ற இடைத் தோ்தல்களில் தோல்வியைச் சந்தித்தது. கருத்துக் கணிப்புகளிலும் அந்தக் கட்சிக்கு வாக்காளா்களிடையே ஆதரவு குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. இந்தச் சூழலில், முன்கூட்டியே தோ்தல் நடத்தப்படவேண்டும் என்று எதிா்க்கட்சியான தொழிலாளா் கட்சி வலியுறுத்திவருகிறது.
தொடர்புடையது

கோடை விடுமுறை: போத்தனூா்- கராக்பூா் இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்

வேட்பாளா்கள் வெறுப்புணா்வு பிரசாரங்களை மேற்கொள்ளக் கூடாது! - கடலூா் ஆட்சியா்

சங்ககிரி சென்னகேசவப்பெருமாள் கோயில் சித்திரை தோ்த் திருவிழா வரும் 22இல் தொடக்கம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் மாா்ச் 31- இல் மதுக்கடைகள் மூடல்: ஆட்சியா்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


