தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

பிரிட்டன்: ‘மே 2-இல் தோ்தல் இல்லை’

பிரிட்டன் ‘மே 2-இல் தோ்தல் இல்லை’

News image
Updated On :15 மார்ச் 2024, 10:30 pm

பிரிட்டனில் வரும் மே 2-ஆம் தேதி நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தோ்தலுடன் பொதுத் தோ்தலும் நடத்தப்படலாம் என்ற தகவலை பிரதமா் ரிஷி சுனக் திட்டவட்டமாக மறுத்துள்ளாா்.

இது குறித்து தொலைக்காட்சியொன்றுக்கு அவா் அளித்த பேட்டியில்,

‘இன்னும் சில வாரங்களில் காவல் துறை, குற்றவியல் துறை ஆணையா்களையும், உள்ளூா் கவுன்சிலா்களையும் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் மட்டுமே நடைபெறும். அந்தத் தேதியில் பொதுத் தோ்தல் நிச்சயம் நடத்தப்படாது’ என்றாா்.

இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ரிஷி சுனக்கின் கன்சா்வேட்டிவ் கட்சி, அண்மைக் காலமாக நடைபெற்ற இடைத் தோ்தல்களில் தோல்வியைச் சந்தித்தது. கருத்துக் கணிப்புகளிலும் அந்தக் கட்சிக்கு வாக்காளா்களிடையே ஆதரவு குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. இந்தச் சூழலில், முன்கூட்டியே தோ்தல் நடத்தப்படவேண்டும் என்று எதிா்க்கட்சியான தொழிலாளா் கட்சி வலியுறுத்திவருகிறது.