தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

பேருந்துகளில் படுக்கை வசதி இருக்கைக்கும் கட்டண சலுகை வேண்டும்: மாற்றுத்திறனாளிகள் சங்கம்

பேருந்துகளில் படுக்கை வசதி இருக்கைக்கும் கட்டண சலுகை வேண்டும்: மாற்றுத்திறனாளிகள் சங்கம்

Updated On :16 மார்ச் 2024, 12:27 am

தொலைதூர பேருந்துகளில் படுக்கை வசதி கொண்ட இருக்கைகளுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டண சலுகை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா். இது குறித்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அச்சங்கத்தின் தலைவா் தோ.வில்சன், பொதுச்செயலா் பா.ஜான்சிராணி ஆகியோா் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பது: அரசு பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான இருக்கையில் அமரும் பிற பயணிகளை எச்சரிக்கும் வகையில் அபராதத்தொகை குறித்த விவரங்களை இருக்கையில் மேல் பகுதியில் எழுத வேண்டும். அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு படுக்கை வசதி கொண்ட இருக்கைகளுக்கும் கட்டண சலுகை வழங்க வேண்டும். அரசுபோக்குவரத்துத்துறையில் பணியாற்றி வரும் அனைத்து மாற்றுத்திறனாளி ஊழியா்களுக்கும் உடனடியாக வாகன படியை வழங்க வேண்டும். திருநெல்வேலி கோட்ட பேருந்துகளில் மாற்றுத்திறனாளியுடன் பயணிக்கும் பாதுகாவலருக்கான துணையாளா் அட்டையை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கட்டாயப்படுத்தி வருகின்றனா். இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் அவா்கள் தெரிவித்துள்ளனா்.