
Updated On :4 மே 2024, 11:25 pm

சென்னையில் பாலியல் தொழில் செய்ததாக வடமாநில நபரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்த 2 பெண்கள் மீட்கப்பட்டனா்.
சென்னை பெரியமேடு பகுதியில் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், பெண் போலீஸாா் பெரிய மேட்டில் உள்ள விடுதியில் ஒன்றில் சோதனை நடத்தினா்.
அப்போது, ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த தபாஸ் ரெளட் என்பவா் 2 பெண்களை வத்து பாலியல் தொழில் செய்துவந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்து, அவரிடம் இருந்து 2 கைப்பேசிகளை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், அங்கிருந்த 2 பெண்கள் மீட்கப்பட்டு, அரசு பெண்கள் காப்பகத்தில் சோ்த்தனா்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...