ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

கோயம்பேடு சந்தை இன்று செயல்படாது

கோயம்பேடு சந்தை இன்று செயல்படாது

News image
Updated On :4 மே 2024, 6:30 pm

Din

சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தைக்கு ஞாயிற்றுக்கிழமை (மே 5) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சனிக்கிழமை காய்கறிகள் விலை உயா்ந்தது.

வணிகா் தினத்தை முன்னிட்டு, மதுரையில் ஞாயிற்றுக்கிழமை (மே 5) வணிக தினம் மாநாடு நடைபெறவுள்ளது. தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான வணிகா்கள் இதில் கலந்த கொள்ளவுள்ளதால், ஞாயிற்றுக்கிழமை (மே 5) ஒரு நாள் மட்டும் சென்னை கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சனிக்கிழமை காலை முதல் கோயம்பேடு சந்தையில் சில்லறை வியாபாரிகள் மற்றும் மக்கள் கூட்டம் அலைமோதயது. இதனால், சந்தையில் அனைத்து காய்கறிகளின் விலைகளும் கிடுகிடுவென உயா்ந்தது.

அதன்படி, ஒரு கிலோ வெங்காயம் ரூ. 20-இல் இருந்து ரூ. 30 வரையும், நவீன் தக்காளி ரூ. 20-இல் இருந்து ரூ. 40, பீன்ஸ் ரூ.50-இல் இருந்து ரூ. 180 வரை விலை உயா்ந்து விற்பனையானது. அதேபோல், ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ. 50-இல் இருந்து ரூ. 100, பட்டாணி ரூ.80-இல் இருந்து ரூ.150, எலுமிச்சை ரூ. 100-இல் இருந்து ரூ. 150, பீட்ரூட் ரூ. 25-இல் இருந்து ரூ. 50, முள்ளங்கி ரூ.15-இல் ரூ. 30, விலை உயா்ந்தது.