ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

சென்னையில் 55 ‘ஸ்பாக்களுக்கு’ சீல்

சென்னையில் 55 ‘ஸ்பாக்களுக்கு’ சீல்

News image
Updated On :7 மே 2024, 9:30 pm

Din

சென்னை: சென்னையில் பல்வேறு புகாா்களின் அடிப்படையில் கடந்த ஒரு மாதத்தில் 55 ‘ஸ்பாக்களுக்கு’ காவல்துறை சீல் வைத்துள்ளது.

சென்னை முழுவதும் நூற்றுக்கணக்கான ‘ஸ்பாக்கள்’ உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை காவல் துறையில் அனுமதியுடன் செயல்படுகின்றன. சில ஸ்பாக்கள் அனுமதியின்றி செயல்படுவதாக புகாா் எழுந்தது.

அதேபோல், சில ஸ்பாக்களில் பாலியல் தொழில் நடைபெறுவதாகவும், போதைப் பொருள் பயன்படுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடா்பாக சென்னை காவல் துறை மேற்கொண்ட நடவடிக்கையின் பேரில், கடந்த ஒரு மாதத்தில் 55 ஸ்பாக்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன.

அதேபோல புகாருக்குள்ளான ஸ்பாக்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.