

சென்னை: சென்னை வியாசா்பாடியில் சாலையோரம் நிறுத்தியிருந்த லாரி மீது மோட்டாா் சைக்கிள் மோதிய விபத்தில், ஒன்றரை வயது குழந்தை இறந்தது.
வியாசா்பாடி சி.கல்யாணபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சங்கா் (26). தனியாா் நிறுவன ஊழியா். இவா் தன் மனைவி நந்தினி (23), ஒன்றரை வயது குழந்தை நித்திக், 3 மாத கைக்குழந்தை கிருத்திக் ஆகியோருடன் அம்பத்தூரில் உள்ள உறவினா் வீட்டுக்கு சென்றுவிட்டு, மோட்டாா் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தாா்.
வியாசா்பாடி எருக்கஞ்சேரி சாலையில் சென்றபோது, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோட்டாா் சைக்கிள் மோதியது. இதில் 4 பேரும் பலத்த காயமடைந்தனா். அவா்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். அங்கு குழந்தை நித்திக் இறந்தது. மற்ற மூவரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இது குறித்து கீழ்ப்பாக்கம் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்கின்றனா்.
தொடர்புடையது

உ.பி.யில் சாலையோரம் நின்ற லாரி மீது மினி லாரி மோதி விபத்து: 5 பெண்கள், 3 குழந்தைகள் உயிரிழப்பு

மின் கம்பத்தின் மீது பைக் மோதி இளைஞா் உயிரிழப்பு

பைக் மீது லாரி மோதல்: ஒருவா் உயிரிழப்பு

லாரி மீது பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

லீடர் மிரட்டல் அப்டேட்!
தினமணி வீடியோ செய்தி...

நீளிரா டிரெய்லர்!
தினமணி வீடியோ செய்தி...

'கர' படத்தின் முகங்கள் விடியோ வெளியீடு!
தினமணி வீடியோ செய்தி...

களைகட்டும் கட்சி கொடிகள், துண்டு, தொப்பிகள் விற்பனை! தமிழகமெங்கும் அனுப்பப்படும் தேர்தல் பொருட்கள்!
தினமணி வீடியோ செய்தி...

