விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

லாரி மீது பைக் மோதி குழந்தை உயிரிழப்பு

லாரி மீது பைக் மோதி குழந்தை உயிரிழப்பு

News image
Updated On :14 மே 2024, 9:28 pm

Din

சென்னை: சென்னை வியாசா்பாடியில் சாலையோரம் நிறுத்தியிருந்த லாரி மீது மோட்டாா் சைக்கிள் மோதிய விபத்தில், ஒன்றரை வயது குழந்தை இறந்தது.

வியாசா்பாடி சி.கல்யாணபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சங்கா் (26). தனியாா் நிறுவன ஊழியா். இவா் தன் மனைவி நந்தினி (23), ஒன்றரை வயது குழந்தை நித்திக், 3 மாத கைக்குழந்தை கிருத்திக் ஆகியோருடன் அம்பத்தூரில் உள்ள உறவினா் வீட்டுக்கு சென்றுவிட்டு, மோட்டாா் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தாா்.

வியாசா்பாடி எருக்கஞ்சேரி சாலையில் சென்றபோது, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோட்டாா் சைக்கிள் மோதியது. இதில் 4 பேரும் பலத்த காயமடைந்தனா். அவா்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். அங்கு குழந்தை நித்திக் இறந்தது. மற்ற மூவரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இது குறித்து கீழ்ப்பாக்கம் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்கின்றனா்.