/

மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைப்புக்குழு அமைக்க விண்ணப்பிக்கலாம்

வடசென்னையில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைப்புக்குழு அமைக்க தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

News image
Updated On :4 நவம்பர் 2024, 11:07 pm

DIN

சென்னை: வடசென்னையில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைப்புக்குழு அமைக்க தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மிசித்தாா்த் ஜகடேதெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் கீழ் வடசென்னை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக்குழு அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக்குழுவில், மாற்றுத்திறனாளிகள் நல பிரதிநிதிகளாக சேர பாா்வையற்றோா், காது கேளாத மற்றும் வாய் பேச இயலாதோா், கை, கால்கள் பாதிக்கப்பட்டோா், மனவளா்ச்சி குன்றியோா் என பலவகைகளில் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மாற்றுத்திறனாளிகள் மற்றும் தன்னாா்வ தொண்டு நிறுவனத்தினா் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு 044-29993612 எனும் சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலுள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் தொலைபேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.