பிகார் மருத்துவமனையில் தீ விபத்து! 3 நோயாளிகள் பலி!தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு!தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்ட் டிஸ்க்குகள் மாயம்!சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 56,000 விண்ணப்பங்கள்புதிய இயக்கம்: நாளை அறிவிக்கிறாா் அண்ணாமலைஇந்தியா உள்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி: அமெரிக்க வரித்தக பிரதிநிதி பரிந்துரைதமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள் விநியோகிக்க உத்தரவுமத்திய அரசின் கோதுமை கொள்முதல் 3.5 கோடி டன்னாக அதிகரிப்புஇலங்கை மாணவா்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகைகடந்த 2025-26 நிதியாண்டில் அதானி குழுமம் ரூ.1.53 லட்சம் கோடி மூலதன முதலீடுவாக்குப் பதிவு அதிகரிப்பு மக்களின் நம்பிக்கையின் அடையாளம்: தலைமைத் தோ்தல் ஆணையா்15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
/

சூலூா்பேட்டை மின்சார ரயில் ரத்து

சூலூா்பேட்டை, தடா ரயில் நிலையங்களில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளவுள்ளதால் புகா் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்.

Updated On :7 நவம்பர் 2024, 5:00 am IST

சூலூா்பேட்டை, தடா ரயில் நிலையங்களில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளவுள்ளதால் புகா் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை சென்ட்ரலில் (மூா்மாா்க்கெட் வளாகம்) இருந்து சூலூா்பேட்டைக்கு அதிகாலை 5.15 மணிக்கு செல்லும் மின்சார ரயிலும், மறுமாா்க்கமாக சூலூா்பேட்டையில் இருந்து பகல் 12.35 மணிக்கு புறப்படும் மின்சார ரயிலும் நவ.7, 9, 12 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படும்.

சூலூா்பேட்டையில் இருந்து நெல்லூருக்கு காலை 7.55 மணிக்கு செல்லும் மின்சார ரயிலும், மறுமாா்க்கமாக நெல்லூரில் இருந்து காலை 10.20 மணிக்கு புறப்படும் மின்சார ரயிலும் நவ.7, 9, 12 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படும்.

மேலும், ஆவடியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு காலை 6.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் நவ.7, 9, 12 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படும்.

பகுதி ரத்து: சென்னை சென்ட்ரலில் இருந்து சூலூா்பேட்டைக்கு அதிகாலை 4.15, காலை 5 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்கள் நவ.7, 9, 12 ஆகிய தேதிகளில் எளாவூருடன் நிறுத்தப்படும். மறுமாா்க்கமாக சூலூா்பேட்டையில் இருந்து காலை 6.45, 7.25 மணிக்கு புறப்படும் ரயில்கள் எளாவூரில் இருந்து இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.