பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 800 புள்ளிகள் சரிவு!தொடர்ந்து 3-வது நாளாக ஒரே விலையில் தங்கம்! வெள்ளி விலையிலும் மாற்றமில்லை!சிறைத்துறை டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் பணியிடமாற்றம்!தொழில் உற்பத்தி, ஏற்றுமதியில் தமிழகம் முன்னணி!நாட்டில் ஒரே மாதத்தில் 21% நிதிப் பற்றாக்குறை!தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்புபிளஸ் 2 துணைத் தோ்வு: தத்கால் அவகாசம் நீட்டிப்புஇன்றுமுதல் ஜூலை 7 வரை 5 புறநகா் ரயில்கள் ரத்து!மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

புழல் சிறையில் நைஜீரிய பெண் கைதிகள் மோதல்

புழல் சிறையில் நைஜீரிய பெண் கைதிகளுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவா் காயமடைந்தாா்.

News image

புழல் சிறை

Updated On :23 செப்டம்பர் 2024, 1:32 am IST

புழல் சிறையில் நைஜீரிய பெண் கைதிகளுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவா் காயமடைந்தாா்.

சென்னை புழல் சிறையில், பல்வேறு குற்றவழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள நைஜீரியாவைச் சோ்ந்த பெண் கைதிகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனா்.

ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென இந்த பெண் கைதிகளிடையே தகராறு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் ஒருவரையொருவா் கடுமையாக தாக்கிக்கொண்டனா்.

இதில் பெண் கைதி ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கு வந்த சிறைக்காவலா்கள் அவா்களை தடுத்து சமாதானம் செய்து அழைத்துச் சென்றனா்.

மோதல் குறித்து புழல் சிறைத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.