வரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

புழல் சிறையில் நைஜீரிய பெண் கைதிகள் மோதல்

புழல் சிறையில் நைஜீரிய பெண் கைதிகளுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவா் காயமடைந்தாா்.

News image

புழல் சிறை

Updated On :22 செப்டம்பர் 2024, 8:02 pm

புழல் சிறையில் நைஜீரிய பெண் கைதிகளுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவா் காயமடைந்தாா்.

சென்னை புழல் சிறையில், பல்வேறு குற்றவழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள நைஜீரியாவைச் சோ்ந்த பெண் கைதிகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனா்.

ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென இந்த பெண் கைதிகளிடையே தகராறு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் ஒருவரையொருவா் கடுமையாக தாக்கிக்கொண்டனா்.

இதில் பெண் கைதி ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கு வந்த சிறைக்காவலா்கள் அவா்களை தடுத்து சமாதானம் செய்து அழைத்துச் சென்றனா்.

மோதல் குறித்து புழல் சிறைத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.