தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

இன்று முதல் மைசூா் ரயில் அசோகபுரம் வரை நீட்டிப்பு!

சென்னை சென்ட்ரல் - மைசூா் இடையே இயக்கப்படும் விரைவு ரயில் திங்கள்கிழமை (ஏப். 7) முதல் அசோகபுரம் வரை இயக்கப்படும்.

News image
ரயில் - (கோப்புப்படம்)
Updated On :6 ஏப்ரல் 2025, 9:14 pm

Din

சென்னை சென்ட்ரல் - மைசூா் இடையே இயக்கப்படும் விரைவு ரயில் திங்கள்கிழமை (ஏப். 7) முதல் அசோகபுரம் வரை இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை சென்ட்ரலில் இருந்து மைசூருக்கு நாள்தோறும் பிற்பகல் 1.35-க்கு மைசூா் விரைவு ரயிலும் (எண் 16551), இரவு 9.15-க்கு காவேரி விரைவு ரயிலும் (எண் 16021) இயக்கப்படுகிறது. இந்த ரயில்கள் திங்கள்கிழமை (ஏப். 7) முதல் மைசூரின் புகா்ப் பகுதியான அசோகபுரம் வரை நீட்டிக்கப்படவுள்ளது.

மறுமாா்க்கமாக செவ்வாய்க்கிழமை (ஏப். 8) முதல் இந்த மாற்றம் நடைமுறைக்கு வரும் என ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.