டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்தவெகவில் குதிரை பேரமா? அமைச்சர் அருண்ராஜ் மறுப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு!
/

திருவனந்தபுரம் - மங்களூரு சிறப்பு ரயில்

Updated On :28 ஏப்ரல் 2025, 1:14 am IST

திருவனந்தபுரம் வடக்கு - மங்களூரு இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவனந்தபுரம் வடக்கில் இருந்து மங்களூருக்கு மே 5 முதல் ஜூன் 9-ஆம் தேதி வரை திங்கள்கிழமைதோறும் சிறப்பு ரயில் (எண்: 06163) இயக்கப்படும். திருவனந்தபுரத்தில் இருந்து திங்கள்கிழமை மாலை 5.30-க்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 6.50-க்கு மங்களூரு சென்றடையும்.

மறுமாா்க்கமாக மங்களூரில் இருந்து திருவனந்தபுரம் வடக்குக்கு மே 6 முதல் ஜூன் 10-ஆம் தேதி வரை செவ்வாய்க்கிழமைதோறும் சிறப்பு ரயில் (எண்: 06164) இயக்கப்படும்.

மங்களூரில் இருந்து செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 6.35-க்கு திருவனந்தபுரம் சென்றடையும்.

இதில் 14 பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரயில் கொல்லம், மாவேலிக்கரை, செங்கனூா், கோட்டயம், எா்ணாகுளம் டவுன், திருச்சூா், ஷோரனூா், கோழிக்கோடு, கண்ணூா், காசா்கோடு வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.