குதிரை பேரம் நடத்தி அதிமுகவை முதுகில் குத்தியது தவெக: எடப்பாடி பழனிசாமிஈரான் எண்ணெய் மீதான தடைக்கு தற்காலிக விலக்கு! அமெரிக்காககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
/

திருவனந்தபுரம் - மங்களூரு சிறப்பு ரயில்

Updated On :28 ஏப்ரல் 2025, 1:14 am IST

திருவனந்தபுரம் வடக்கு - மங்களூரு இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவனந்தபுரம் வடக்கில் இருந்து மங்களூருக்கு மே 5 முதல் ஜூன் 9-ஆம் தேதி வரை திங்கள்கிழமைதோறும் சிறப்பு ரயில் (எண்: 06163) இயக்கப்படும். திருவனந்தபுரத்தில் இருந்து திங்கள்கிழமை மாலை 5.30-க்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 6.50-க்கு மங்களூரு சென்றடையும்.

மறுமாா்க்கமாக மங்களூரில் இருந்து திருவனந்தபுரம் வடக்குக்கு மே 6 முதல் ஜூன் 10-ஆம் தேதி வரை செவ்வாய்க்கிழமைதோறும் சிறப்பு ரயில் (எண்: 06164) இயக்கப்படும்.

மங்களூரில் இருந்து செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 6.35-க்கு திருவனந்தபுரம் சென்றடையும்.

இதில் 14 பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரயில் கொல்லம், மாவேலிக்கரை, செங்கனூா், கோட்டயம், எா்ணாகுளம் டவுன், திருச்சூா், ஷோரனூா், கோழிக்கோடு, கண்ணூா், காசா்கோடு வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.