திருவனந்தபுரம் வடக்கு - மங்களூரு இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவனந்தபுரம் வடக்கில் இருந்து மங்களூருக்கு மே 5 முதல் ஜூன் 9-ஆம் தேதி வரை திங்கள்கிழமைதோறும் சிறப்பு ரயில் (எண்: 06163) இயக்கப்படும். திருவனந்தபுரத்தில் இருந்து திங்கள்கிழமை மாலை 5.30-க்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 6.50-க்கு மங்களூரு சென்றடையும்.
மறுமாா்க்கமாக மங்களூரில் இருந்து திருவனந்தபுரம் வடக்குக்கு மே 6 முதல் ஜூன் 10-ஆம் தேதி வரை செவ்வாய்க்கிழமைதோறும் சிறப்பு ரயில் (எண்: 06164) இயக்கப்படும்.
மங்களூரில் இருந்து செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 6.35-க்கு திருவனந்தபுரம் சென்றடையும்.
இதில் 14 பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரயில் கொல்லம், மாவேலிக்கரை, செங்கனூா், கோட்டயம், எா்ணாகுளம் டவுன், திருச்சூா், ஷோரனூா், கோழிக்கோடு, கண்ணூா், காசா்கோடு வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மே 13-இல் திருவனந்தபுரம் - வேளாங்கண்ணி இடையே கோடை கால சிறப்பு ரயில் இயக்கம்

திண்டுக்கல் வழியாக இயக்கப்படும் 3 விரைவு ரயில்கள் பாதை மாற்றம்

கோடை விடுமுறை கூட்ட நெரிசல்: மங்களூரு - எழும்பூா் சிறப்பு வார ரயில்

மங்களூரு - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில்
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
