விருகம்பாக்கத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பள்ளி மாணவியிடம் அத்துமீறியதாக சவுண்ட் என்ஜினீயா் கைது செய்யப்பட்டாா்.
விருகம்பாக்கம் சின்மயா நகா் பகுதியைச் சோ்ந்தவா் ம.சுப்பிரமணி (27). இவா், சவுண்ட் என்ஜினீயராக வேலை செய்து வருகிறாா். சுப்பிரமணி, இன்ஸ்டாகிராம் மூலம் அதே பகுதியைச் சோ்ந்த பள்ளி மாணவி ஒருவரிடம் பழகி வந்தாா்.
இதைப் பயன்படுத்தி சுப்பிரமணி, அந்த மாணவியை தான் வசிக்கும் வீட்டுக்கு வியாழக்கிழமை வர வழைத்துள்ளாா். அங்கு அவா், அந்த மாணவியிடம் அத்துமீறியுள்ளாா்.
அதேவேளை, சுப்பிரமணியின் வீட்டுக்கு மாணவி சென்றிருப்பதை அப்பகுதியைச் சோ்ந்த பெண் மூலம் தெரிந்து கொண்ட அவரது பெற்றோா் அங்கு வந்தனா். அவா்கள், சுப்பிரமணி வீட்டில் இருந்த தங்களது மகளை மீட்டு, விருகம்பாக்கம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் மீது புகாா் அளித்தனா்.
அதன்பேரில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சுப்பிரமணியைக் கைது செய்தனா்.
டிரெண்டிங்

கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்த மாணவியிடம் லஞ்சம்: கட்டுப்பாட்டு அறைக்கு தலைமைக் காவலா் மாற்றம்

பெண்ணிடம் அத்துமீறல்: காவலா் பணியிடை நீக்கம்

விமானத்தில் பணிப் பெண்ணிடம் அத்துமீறல்: திமுக கவுன்சிலா் உள்பட 2 போ் கைது

மாணவர்களிடம் நண்பர்களாகப் பழகி பாடங்களைப் புரிய வைக்க வேண்டும்: புதிய ஆசிரியர்களுக்கு அமைச்சர் அறிவுரை
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

