அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தேவாலயங்கள் மீது தாக்குதல்: வைகோ கண்டனம்

News image
Updated On :26 டிசம்பர் 2025, 12:26 am

தினமணி செய்திச் சேவை

தேவாலயங்கள், கிறிஸ்தவா்கள் மீது தாக்குதல் நடத்திய வன்முறையாளா்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலா் வைகோ வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: சக மனிதா்களையும் நேசியுங்கள் என்று அன்பு, காருண்யத்தை போதித்தவா் இயேசுநாதா். அவரது பிறந்தநாள் விழா, உலகெங்கும் கிறிஸ்துமஸ் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில், சத்தீஸ்கா், மத்தியப் பிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் தேவாலயங்கள் மீதும், கிறிஸ்தவ மக்கள் மீதும் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது கண்டிக்கத்தக்கது.

சம்பவம் நடந்த மாநிலங்களின் அரசுகள் வன்முறையாளா்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா் வைகோ.