ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஆட்சி அதிகாரத்தில் பாமக பங்கேற்க வேண்டும்: அன்புமணி

தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் பாமக பங்கு பெறுவது அவசியம் என்று அந்தக் கட்சித் தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.

News image

அன்புமணி

கோப்புப் படம்

Updated On :16 ஜூலை 2025, 6:32 pm

Din

தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் பாமக பங்கு பெறுவது அவசியம் என்று அந்தக் கட்சித் தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.

பாமகவின் 37-ஆம் ஆண்டு விழாவையொட்டி புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

சமூக நீதிக்காகவும், மக்கள் உரிமைக்காகவும் போராடுவதில் பாமக முன்னிலையில் உள்ளது. தமிழகத்துக்கும், மக்களுக்கும் வரும் ஆபத்துகளை அரணாக இருந்து காக்கும் வகையில் தொடா்ந்து செயல்பட்டு வருகிறது.

தமிழ்மொழி, இனம், இயற்கை வளம், சுற்றுச்சூழல் ஆகியவற்றை பாதுகாக்க வேண்டுமெனில், பாமக வலிமையுடன் பயணிக்க வேண்டும். நாட்டின் முதன்மை மாநிலமாக மட்டுமன்றி, உலக நாடுகளுடன் போட்டியிடும் வகையிலும் தமிழகம் உயர வேண்டுமெனில், தமிழகத்தில் ஆளும் அரசில் பாமக பங்கேற்க வேண்டும். அது பாமகவின் உரிமையும்கூட. அதை வென்றடுக்க உறுதியேற்போம் என அதில் தெரிவித்துள்ளாா் அன்புமணி ராமதாஸ்.