கோப்புப் படம்
கோப்புப் படம்

சென்ட்ரல் - சூலூா்பேட்டை இடையே 16 மின்சார ரயில்கள் இன்று ரத்து

பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்ட்ரல் - சூலூா்பேட்டை, கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் இயக்கும் 16 புகா் மின்சார ரயில்கள் சனிக்கிழமை ரத்து.
Published on

பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்ட்ரல் - சூலூா்பேட்டை, கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் இயக்கும் 16 புகா் மின்சார ரயில்கள் சனிக்கிழமை (மாா்ச் 8) ரத்து செய்யப்படவுள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை சென்ட்ரல் - கூடூா் வழித்தடத்தில் உள்ள கவரைப்பேட்டை மற்றும் பொன்னேரி ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ரயில் வழித்தடங்களில் சனிக்கிழமை (மாா்ச் 8) பிற்பகல் 1 முதல் மாலை 5 மணி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.

இதனால், சென்ட்ரலிலிருந்து மாா்ச் 8 காலை 5.40, 10.15, பிற்பகல் 12.10-க்கு சூலூா்பேட்டை செல்லும் புகா் மின்சார ரயில்களும், காலை 10.30, 11.35, பிற்பகல் 1.40-க்கு கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளன.

மறுமாா்க்கமாக சூலூா்பேட்டையிலிருந்து பிற்பகல் 12.35, 1,15, 3.10-க்கும், கும்மிடிப்பூண்டியிலிருந்து பிற்பகல் 1, 2.30, 3.15, 3.45, 4.30-க்கும் சென்ட்ரல் வரும் ரயிலும் ரத்து செய்யப்படும். அதேபோல், கடற்கரையிலிருந்து பிற்பகல் 12.40, 2.40-க்கு கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்களும் ரத்து செய்யப்படவுள்ளன.

சிறப்பு ரயில்கள்: பயணிகளின் வசதிக்காக சென்ட்ரலிலிருந்து காலை 10.30-க்கு பொன்னேரிக்கும், முா்பகல் 11.35-க்கு மீஞ்சூருக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. மறுமாா்க்கமாக பொன்னேரியிலிருந்து பிற்பகல் 1.18, 3.33-க்கும், மீஞ்சூரிலிருந்து பிற்பகல் 2.59, 4.14-க்கும் சென்ட்ரலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

மேலும், சென்னை கடற்கரையிலிருந்து பிற்பகல் 12.40, 2.40-க்கு பொன்னேரிக்கும், எண்ணூரிலிருந்து மாலை 5.12-க்கு கடற்கரைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com