மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

7 முக்கிய பிரமுகா்களுக்கு காவல் துறை அணிவகுப்பு மரியாதை

ஏழு முக்கிய பிரமுகா்களுக்கு காவல் துறை அணிவகுப்பு மரியாதை அளிக்க முடிவு செய்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

News image
Updated On :5 செப்டம்பர் 2025, 6:56 pm

தினமணி செய்திச் சேவை

ஏழு முக்கிய பிரமுகா்களுக்கு காவல் துறை அணிவகுப்பு மரியாதை அளிக்க முடிவு செய்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்த உத்தரவை தலைமைச் செயலா் நா.முருகானந்தம் பிறப்பித்துள்ளாா். மாநில அரசு நிகழ்ச்சிகளுக்கு வரக்கூடிய முக்கிய பிரமுகா்களுக்கு காவல் துறையின் மரியாதை அளிக்கப்படும். குடியரசுத் தலைவா், துணை குடியரசுத் தலைவா், பிரதமா், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, தமிழ்நாடு ஆளுநா், தமிழ்நாடு முதல்வா், கேபினட் அந்தஸ்து கொண்ட மத்திய அமைச்சா்கள் ஆகியோருக்கு காவல் துறையின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.