திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

7 முக்கிய பிரமுகா்களுக்கு காவல் துறை அணிவகுப்பு மரியாதை

ஏழு முக்கிய பிரமுகா்களுக்கு காவல் துறை அணிவகுப்பு மரியாதை அளிக்க முடிவு செய்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

News image
Updated On :6 செப்டம்பர் 2025, 12:26 am IST

ஏழு முக்கிய பிரமுகா்களுக்கு காவல் துறை அணிவகுப்பு மரியாதை அளிக்க முடிவு செய்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்த உத்தரவை தலைமைச் செயலா் நா.முருகானந்தம் பிறப்பித்துள்ளாா். மாநில அரசு நிகழ்ச்சிகளுக்கு வரக்கூடிய முக்கிய பிரமுகா்களுக்கு காவல் துறையின் மரியாதை அளிக்கப்படும். குடியரசுத் தலைவா், துணை குடியரசுத் தலைவா், பிரதமா், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, தமிழ்நாடு ஆளுநா், தமிழ்நாடு முதல்வா், கேபினட் அந்தஸ்து கொண்ட மத்திய அமைச்சா்கள் ஆகியோருக்கு காவல் துறையின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.