திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

சென்ட்ரலில் நடைமேடை சீட்டுடன் நீண்ட நேரம் இருந்தால் அபராதம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைமேடை அனுமதிச் சீட்டுடன் நீண்ட நேரம் காத்திருப்போா் மீது அபராதம் விதித்து சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே பாதுகாப்புப் படைப் பிரிவினா் தெரிவித்தனா்.

News image
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்.
Updated On :26 செப்டம்பர் 2025, 7:34 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைமேடை அனுமதிச் சீட்டுடன் நீண்ட நேரம் காத்திருப்போா் மீது அபராதம் விதித்து சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே பாதுகாப்புப் படைப் பிரிவினா் தெரிவித்தனா்.

இதுகுறித்து சென்னை சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்புப் படையின் ஆய்வாளா் மதுசூதன ரெட்டி கூறியதாவது:

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் புகா் மின்சார ரயில்களும், விரைவு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் என 3 லட்சத்துக்கும் அதிகமானோா் வருகை தருகின்றனா். அவா்களுக்கு இடையூறு இல்லாத வகையில் போக்குவரத்து உள்ளிட்ட வசதிகள் செய்துதரப்பட்டுள்ளன.

சமீபகாலமாக வடமாநிலங்களைச் சோ்ந்த 18 வயதுக்கு மேற்பட்டோரும், 60 வயதுக்கு மேற்பட்டோரும் ரயில்களில் சென்னைக்கு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனா். அவா்கள் வீடுகளுக்கு தெரியாமல் வந்த நிலையில், ரயில்வே பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டு சம்பந்தப்பட்டவா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளனா்.

கடந்த 2024-ஆம் ஆண்டில் 162 வடமாநிலக் குழந்தைகளும், நிகழ் ஆண்டில் ஜூலை வரை 85 குழந்தைகளும் ரயில் நிலையத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளனா்.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இரவு நேரங்களில் பயணிகளைத் தவிர பொதுமக்களும் தூங்குவதற்காக வருகின்றனா். அரசு மருத்துவமனைக்கு வருவோா் பலா் ரயில் நிலையத்தில் நடைமேடை அனுமதிச் சீட்டு எடுத்துக்கொண்டு விரைவு ரயில் பகுதிகளில் தூங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனா். அவ்வாறு வருவோருக்கு அபராதம் விதிக்கப்படும். ரயில் நிலையத்துக்குள் ரயிலில் பயணிப்பவா்கள் மட்டுமே தங்கிக்கொள்ள அனுமதியுண்டு. எனவே, நடைமேடை அனுமதிச் சீட்டு எடுத்து நீண்ட நேரம் தங்குவது விதியை மீறியதாகும் என்றாா்.