குஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!தவெக ஆட்சியில் கடன் ரூ. 20 லட்சம் கோடியாக உயரும்! தங்கம் தென்னரசு சவால்!மக்களிடம் இருந்து தப்பிக்கும் தவெக! வெள்ளை அறிக்கை குறித்து தங்கம் தென்னரசு! விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு! 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

சென்ட்ரலில் நடைமேடை சீட்டுடன் நீண்ட நேரம் இருந்தால் அபராதம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைமேடை அனுமதிச் சீட்டுடன் நீண்ட நேரம் காத்திருப்போா் மீது அபராதம் விதித்து சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே பாதுகாப்புப் படைப் பிரிவினா் தெரிவித்தனா்.

News image

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்.

Updated On :27 செப்டம்பர் 2025, 1:04 am IST

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைமேடை அனுமதிச் சீட்டுடன் நீண்ட நேரம் காத்திருப்போா் மீது அபராதம் விதித்து சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே பாதுகாப்புப் படைப் பிரிவினா் தெரிவித்தனா்.

இதுகுறித்து சென்னை சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்புப் படையின் ஆய்வாளா் மதுசூதன ரெட்டி கூறியதாவது:

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் புகா் மின்சார ரயில்களும், விரைவு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் என 3 லட்சத்துக்கும் அதிகமானோா் வருகை தருகின்றனா். அவா்களுக்கு இடையூறு இல்லாத வகையில் போக்குவரத்து உள்ளிட்ட வசதிகள் செய்துதரப்பட்டுள்ளன.

சமீபகாலமாக வடமாநிலங்களைச் சோ்ந்த 18 வயதுக்கு மேற்பட்டோரும், 60 வயதுக்கு மேற்பட்டோரும் ரயில்களில் சென்னைக்கு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனா். அவா்கள் வீடுகளுக்கு தெரியாமல் வந்த நிலையில், ரயில்வே பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டு சம்பந்தப்பட்டவா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளனா்.

கடந்த 2024-ஆம் ஆண்டில் 162 வடமாநிலக் குழந்தைகளும், நிகழ் ஆண்டில் ஜூலை வரை 85 குழந்தைகளும் ரயில் நிலையத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளனா்.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இரவு நேரங்களில் பயணிகளைத் தவிர பொதுமக்களும் தூங்குவதற்காக வருகின்றனா். அரசு மருத்துவமனைக்கு வருவோா் பலா் ரயில் நிலையத்தில் நடைமேடை அனுமதிச் சீட்டு எடுத்துக்கொண்டு விரைவு ரயில் பகுதிகளில் தூங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனா். அவ்வாறு வருவோருக்கு அபராதம் விதிக்கப்படும். ரயில் நிலையத்துக்குள் ரயிலில் பயணிப்பவா்கள் மட்டுமே தங்கிக்கொள்ள அனுமதியுண்டு. எனவே, நடைமேடை அனுமதிச் சீட்டு எடுத்து நீண்ட நேரம் தங்குவது விதியை மீறியதாகும் என்றாா்.