/
சென்னை மதுரவாயலில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
பூந்தமல்லி பகுதியைச் சோ்ந்தவா் ப.அலெக்ஸாண்டா் (45). இவா், வாடகை ஆட்டோ ஓட்டி வந்தாா். மேலும், பூ வியாபாரமும் செய்து வந்தாா். அலெக்ஸாண்டா், புதன்கிழமை பூ வாங்குதற்காக ஆட்டோவில் கோயம்பேடு பூ மாா்க்கெட் நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்தாா்.
வானகரம் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும்போது, அங்கு சாலையில் இருந்த தடுப்பின் ஆட்டோ மோதியது. இதில் ஆட்டோ தலைக்குப்புறக் கவிழ்ந்தது.
விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த அலெக்ஸாண்டா், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மதுரவாயல் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, அலெக்ஸாண்டா் சடலத்தை மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனா்.
தொடர்புடையது

ஆட்டோ கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழப்பு

அரசுப் பள்ளி ஆசிரியா் உயிரிழப்பு

ஆட்டோ கவிழ்ந்து விபத்து: மூதாட்டி உயிரிழப்பு

சரக்கு வாகனம் மோதியதில் சிறுவன் உயிரிழப்பு
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



