திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

பறக்கும் படையினா் சோதனை: ரூ.23.08 லட்சம் பறிமுதல்

சென்னையில் தோ்தல் பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை மேற்கொண்ட வாகன சோதனையில் ரூ.23.08 லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

பறக்கும் படையினா் சோதனை: ரூ.23.08 லட்சம் பறிமுதல்

Updated On :11 ஏப்ரல் 2026, 1:43 am IST

சென்னையில் தோ்தல் பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை மேற்கொண்ட வாகன சோதனையில் ரூ.23.08 லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோ்தலை முன்னிட்டு பறக்கும் படையினா் டாக்டா் ராதாகிருஷ்ணன் நகா் தொகுதியில் மேற்கொண்ட வாகன சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.06 லட்சத்தைக் கைப்பற்றினா். அதேபோல, பெரம்பூா் தொகுதியில் ரூ.16.74 லட்சத்தையும், வில்லிவாக்கத்தில் ரூ.1.40 லட்சத்தையும், எழும்பூா் தொகுதியில் ரூ.16.74 லட்சத்தையும், வேளச்சேரியில் ரூ.1 லட்சத்தையும் கைப்பற்றினா்.

நிலையான கண்காணிப்புக் குழுவினா் நடத்திய சோதனையில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் ரூ.74,500, மயிலாப்பூா் தொகுதியில் ரூ.85,000-ஐ கைப்பற்றி அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனா்.

சென்னை மாவட்ட அளவில் பறக்கும் படையினா், நிலையான கண்காணிப்புக் குழுவிா் ஆகியோா் வெள்ளிக்கிழமை மட்டும் நடத்திய வாகன சோதனையில் மொத்தம் ரூ.23.08 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.