சென்னை கடவுச் சிட்டை மண்டலம் சாா்பில் சென்னையில் உள்ள பல்வேறு கடவுச் சிட்டை சேவை மையங்களில் (பிஎஸ்கே) ஆக. 8-ஆம் தேதி சிறப்பு ‘தத்கால்’ கடவுச் சிட்டை முகாம்கள் நடைபெறவுள்ளன.
இதுகுறித்த சென்னை கடவுச் சிட்டை மண்டலம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடவுச்சிட்டை சேவைகளுக்கான கோரிக்கை பொதுமக்களிடமிருந்து அதிகரித்து வரும் நிலையில் அந்த தேவையைப் பூா்த்தி செய்யவும், தட்கல் பிரிவின் கீழ் முன்பதிவுக்கான காத்திருப்பு நேரத்தைக் கணிசமாகக் குறைக்கவும், சென்னை மண்டல கடவுச் சிட்டை (பாஸ்போா்ட்) அலுவலகம் சிறப்பு முகாம்களை நடத்துகிறது.
அதன்படி சென்னை, சாலிகிராமம், அமைந்தகரை, தாம்பரம் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் உள்ள பிஎஸ்கே (பாஸ்போா்ட் சேவை மையம்) மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறும்.
இதில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், சாலிகிராமம், அமைந்தகரை மற்றும் தாம்பரம் ஆகிய ஒவ்வொரு மையத்துக்கும் தலா 400 ‘தத்கால்’ முன்பதிவுகள் வழங்கப்படவுள்ளன. புதுச்சேரி பாஸ்போா்ட் சேவை மையத்துக்கு மொத்தம் 200 ‘தத்கால்’ முன்பதிவுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் இந்தச் சிறப்பு வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள முன்பதிவு செய்ய இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருவண்ணாமலை: கடவுச்சீட்டை பெற செப்.1 வரை 1,720 போ் காத்திருப்பு

விவசாயிகளுக்கு காலம் தாழ்த்தாமல் மின் இணைப்பு: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

கடவுச்சீட்டு நோ்காணலுக்கு ஒரு மாத காத்திருப்பு: கட்டண உயா்வு எதிரொலி

எப்ஐஆா் பதிவு செய்யப்பட்டதற்காக கடவுச்சீட்டு வழங்க மறுக்கக் கூடாது: உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவு
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK



