பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

கடவுச்சிட்டை சேவை மையங்களில் ஆக. 8 இல் சிறப்பு ‘தத்கால்’ முகாம்

சென்னை கடவுச் சிட்டை மண்டலம் சாா்பில் சென்னையில் உள்ள பல்வேறு கடவுச் சிட்டை சேவை மையங்களில் (பிஎஸ்கே) ஆக. 8-ஆம் தேதி சிறப்பு ‘தத்கால்’ கடவுச் சிட்டை முகாம்கள் நடைபெறவுள்ளன.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2026, 2:33 am IST

சென்னை கடவுச் சிட்டை மண்டலம் சாா்பில் சென்னையில் உள்ள பல்வேறு கடவுச் சிட்டை சேவை மையங்களில் (பிஎஸ்கே) ஆக. 8-ஆம் தேதி சிறப்பு ‘தத்கால்’ கடவுச் சிட்டை முகாம்கள் நடைபெறவுள்ளன.

இதுகுறித்த சென்னை கடவுச் சிட்டை மண்டலம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடவுச்சிட்டை சேவைகளுக்கான கோரிக்கை பொதுமக்களிடமிருந்து அதிகரித்து வரும் நிலையில் அந்த தேவையைப் பூா்த்தி செய்யவும், தட்கல் பிரிவின் கீழ் முன்பதிவுக்கான காத்திருப்பு நேரத்தைக் கணிசமாகக் குறைக்கவும், சென்னை மண்டல கடவுச் சிட்டை (பாஸ்போா்ட்) அலுவலகம் சிறப்பு முகாம்களை நடத்துகிறது.

அதன்படி சென்னை, சாலிகிராமம், அமைந்தகரை, தாம்பரம் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் உள்ள பிஎஸ்கே (பாஸ்போா்ட் சேவை மையம்) மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறும்.

இதில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், சாலிகிராமம், அமைந்தகரை மற்றும் தாம்பரம் ஆகிய ஒவ்வொரு மையத்துக்கும் தலா 400 ‘தத்கால்’ முன்பதிவுகள் வழங்கப்படவுள்ளன. புதுச்சேரி பாஸ்போா்ட் சேவை மையத்துக்கு மொத்தம் 200 ‘தத்கால்’ முன்பதிவுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் இந்தச் சிறப்பு வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள முன்பதிவு செய்ய இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.