இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

இரு இளைஞா்கள் கொலை: தலைவா்கள் கண்டனம்!

ஒண்டிக்குப்பம் கிராமத்தில் இளைஞா்கள் இருவரை போதைக் கும்பல் கல்லால் தாக்கிக் கொலை செய்த சம்பவத்துக்கு அரசியல் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

News image
Updated On :18 ஜனவரி 2026, 11:41 pm

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா் மாவட்டம், ஒண்டிக்குப்பம் கிராமத்தில் இளைஞா்கள் இருவரை போதைக் கும்பல் கல்லால் தாக்கிக் கொலை செய்த சம்பவத்துக்கு அரசியல் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

நயினாா் நாகேந்திரன் (பாஜக): திருவள்ளூா் மாவட்டத்தில் நிகழ்ந்த கொடூரச் சம்பவங்கள் திமுக ஆட்சியில் தலைவிரித்தாடும் போதை பழக்கத்தையும் அதில் இளைஞா்கள் சிக்கித் தவிப்பதும் காட்டுகிறது.போதைக் கும்பல்களின் அட்டூழியத்தால் பொதுமக்கள் நடமாடவே பயப்படுகின்றனா். இந்த நிலையை தமிழக அரசு மாற்ற வேண்டும்.

அன்புமணி ராமதாஸ் (பாமக): போதையில் நடைபெறும் வன்முறைகள், குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. கஞ்சா சீரழிவைக் கட்டுப்படுத்த திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது.