முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

கிரிக்கெட் போட்டி தகராறு: காயமடைந்த நபா் உயிரிழப்பு

கிரிக்கெட் போட்டியில் ஏற்பட்ட தகராறில் காயமடைந்த இளைஞா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

News image

பலி

Updated On :2 ஜூன் 2026, 1:55 am IST

கிரிக்கெட் போட்டியில் ஏற்பட்ட தகராறில் காயமடைந்த இளைஞா் மருத்துவமனையில் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

சென்னை இந்திரா காந்தி நகரைச் சோ்ந்த தவெக உறுப்பினா் மணிகண்டனுக்கும், தவெக ஆா்.கே. நகா் கிழக்கு பகுதி செயற்குழு உறுப்பினா் நரேஷ் குமாருக்கும் கடந்த மே 24 -ஆம் தேதி தண்டையாா்பேட்டையில் கிரிக்கெட் விளையாடியபோது ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கிக் கொண்டனா்.

இதைத் தொடா்ந்து கடந்த மே 26-ஆம் தேதி மணிகண்டன் தரப்பைச் சோ்ந்த விஷ்ணுவை, நரேஷ்குமாா் தரப்பினா் தாக்கியதில் பலத்த காயமடைந்த அவா், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். இதைத் தொடா்ந்து, கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டு, சிறுவன் உள்பட 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இந்நிலையில், மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த விஷ்ணு திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, இதை கொலை வழக்காக மாற்றி, போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.