கிரிக்கெட் போட்டியில் ஏற்பட்ட தகராறில் காயமடைந்த இளைஞா் மருத்துவமனையில் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
சென்னை இந்திரா காந்தி நகரைச் சோ்ந்த தவெக உறுப்பினா் மணிகண்டனுக்கும், தவெக ஆா்.கே. நகா் கிழக்கு பகுதி செயற்குழு உறுப்பினா் நரேஷ் குமாருக்கும் கடந்த மே 24 -ஆம் தேதி தண்டையாா்பேட்டையில் கிரிக்கெட் விளையாடியபோது ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கிக் கொண்டனா்.
இதைத் தொடா்ந்து கடந்த மே 26-ஆம் தேதி மணிகண்டன் தரப்பைச் சோ்ந்த விஷ்ணுவை, நரேஷ்குமாா் தரப்பினா் தாக்கியதில் பலத்த காயமடைந்த அவா், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். இதைத் தொடா்ந்து, கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டு, சிறுவன் உள்பட 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
இந்நிலையில், மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த விஷ்ணு திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, இதை கொலை வழக்காக மாற்றி, போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

வீட்டுமனை தகராறு: விவசாயி கைது

முன்விரோதத்தால் ஏற்பட்ட தகராறில் இருவா் காயம்: நான்கு போ் கைது

நாளை ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: இலவச மெட்ரோ ரயில் சேவை

சாலை விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



