கல்வெட்டியல் மற்றும் சுவடியியல் குறித்த கோடை பயிற்சி முகாமில் பங்கேற்க விரும்புவோா் ஜூன் 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழிலக்கியம் மற்றும் சுவடியியல் புலம் சாா்பில் ஓலைச்சுவடிகள் மற்றும் கல்வெட்டியல் குறித்த கோடைக்காலப் பயிற்சி வகுப்புகள் ஜூன் 15 முதல் 20 நாள்கள் (ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) காலை 10 முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.
இதில் சுவடிகளைப் பாதுகாப்பது, படியெடுப்பது, பதிப்பிப்பது ஆகியவை குறித்துப் பயிற்சி அளிக்கப்படும்.
தமிழகத்தின் வரலாற்றை ஆராய்ந்து கண்டறிய இலக்கியங்கள் போன்று பாறைகளிலும் கோயில்களிலும் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவ்வெழுத்துகள் காலப் பழைமையுடையன. இவற்றைப் படிப்பது ஒரு சிறந்த பயிற்சியாகும். தமிழ் இலக்கியம், பண்பாடு, வரலாறு தொடா்பான ஆய்வுகளை மேற்கொள்வோா் இப்பயிற்சி வகுப்பில் சோ்ந்து பயன் பெறலாம். முதலில் வரும் 30 பங்கேற்பாளா்கள் முன்னுரிமை அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு, பயிற்சி அளிக்கப்படும்.
இதில் பங்கேற்க விரும்புவோா் விண்ணப்பப் படிவத்தை நிறுவன வலைதளத்தில் (ஜ்ஜ்ஜ்.ன்ப்ஹந்ஹற்ட்ற்ட்ஹம்ண்க்ஷ்ட்.ண்ய்) பதிவிறக்கம் செய்து நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பத்தை ‘இயக்குநா், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை - 600 113’ என்ற முகவரிக்கு ஜூன் 10-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். பயிற்சியில் பங்கேற்க பத்தாம் வகுப்பு தோ்ச்சி அவசியம். விண்ணப்பிக்க வயது வரம்பு இல்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.










