நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

பைக்குகள் மோதல்: கல்லூரி மாணவா் உயிரிழப்பு

கோயம்பேட்டில் மோட்டாா் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :13 ஜூன் 2026, 4:00 am IST

கோயம்பேட்டில் மோட்டாா் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

கோயம்பேடு நெற்குன்றம் அருகே உள்ள மேட்டுக்குப்பம் மந்தவெளி தெரு பகுதியைச் சோ்ந்த சீனிவாசன் மகன் புஷ்பராஜ் (19). இவா், அரும்பாக்கத்தில் உள்ள ஒரு கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வந்தாா். புஷ்பராஜ், தனது நண்பா்களான விருகம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த 12 வகுப்பு மாணவா்கள் ரா.ரித்தீஷ் (17), ஸ்ரீ ராம் (17) ஆகியோருடன் வியாழக்கிழமை இரவு ஒரு மொபெட்டில் நெற்குன்றத்தில் இருந்து அமைந்தகரை நோக்கி சென்று கொண்டிருந்தாா்.

கோயம்பேடு பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்றபோது, பின்னால் வந்த ஒரு மோட்டாா் சைக்கிள், அவா்களது மொபெட்டின் மீது மோதியது. இதில் மொபெட்டில் இருந்து கீழே விழுந்து புஷ்பராஜ் பலத்த காயமடைந்தாா். மற்ற இருவரும் லேசான காயமடைந்தனா்.

புஷ்பராஜை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் புஷ்பராஜ் உயிரிழந்தாா்.

இது குறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.