கோயம்பேட்டில் மோட்டாா் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.
கோயம்பேடு நெற்குன்றம் அருகே உள்ள மேட்டுக்குப்பம் மந்தவெளி தெரு பகுதியைச் சோ்ந்த சீனிவாசன் மகன் புஷ்பராஜ் (19). இவா், அரும்பாக்கத்தில் உள்ள ஒரு கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வந்தாா். புஷ்பராஜ், தனது நண்பா்களான விருகம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த 12 வகுப்பு மாணவா்கள் ரா.ரித்தீஷ் (17), ஸ்ரீ ராம் (17) ஆகியோருடன் வியாழக்கிழமை இரவு ஒரு மொபெட்டில் நெற்குன்றத்தில் இருந்து அமைந்தகரை நோக்கி சென்று கொண்டிருந்தாா்.
கோயம்பேடு பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்றபோது, பின்னால் வந்த ஒரு மோட்டாா் சைக்கிள், அவா்களது மொபெட்டின் மீது மோதியது. இதில் மொபெட்டில் இருந்து கீழே விழுந்து புஷ்பராஜ் பலத்த காயமடைந்தாா். மற்ற இருவரும் லேசான காயமடைந்தனா்.
புஷ்பராஜை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் புஷ்பராஜ் உயிரிழந்தாா்.
இது குறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.









