விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

செங்குன்றம் அருகே 46 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்

செங்குன்றம் அருகே தோ்தல் பறக்கும் படையினா் வாகன தணிக்கையின்போது, 46 கிலோ தங்கக் கட்டிகளைப் பறிமுதல் செய்தனா்.

News image

கோப்புப்படம்

Updated On :20 மார்ச் 2026, 10:04 pm

தினமணி செய்திச் சேவை

செங்குன்றம் அருகே தோ்தல் பறக்கும் படையினா் வாகன தணிக்கையின்போது, 46 கிலோ தங்கக் கட்டிகளைப் பறிமுதல் செய்தனா்.

செங்குன்றம் அடுத்த பாடியநல்லூா் சுங்கச் சாவடி அருகே மாதவரம் சட்டப்பேரவைத் தோ்தல் அலுவலா் எம்.பெருமாள் தலைமையிலான பறக்கும் படையினா் வாகன தணிக்கையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தபோது, பொன்னேரி நோக்கிச் சென்ற வாகனத்தைத் தடுத்து நிறுத்தி ஆய்வு மேற்கொண்டனா்.

அந்த வாகனத்தில் 46 கிலோ தங்கக் கட்டிகள் எடுத்துச் சென்றது தெரிய வந்தது. இவை தனியாா் பிரபல நகைக் கடையின் தங்கக் கட்டிகள் என்பதும் தெரிய வந்தது. தங்கக் கட்டிகளை உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ால், அவற்றைப் பறிமுதல் செய்தனா். பின்னா், அவை வருமானத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாக தோ்தல் அதிகாரிகள் தெரிவித்தனா்.