செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

செங்குன்றம் அருகே 46 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்

செங்குன்றம் அருகே தோ்தல் பறக்கும் படையினா் வாகன தணிக்கையின்போது, 46 கிலோ தங்கக் கட்டிகளைப் பறிமுதல் செய்தனா்.

News image

கோப்புப்படம்

Updated On :20 மார்ச் 2026, 10:04 pm

செங்குன்றம் அருகே தோ்தல் பறக்கும் படையினா் வாகன தணிக்கையின்போது, 46 கிலோ தங்கக் கட்டிகளைப் பறிமுதல் செய்தனா்.

செங்குன்றம் அடுத்த பாடியநல்லூா் சுங்கச் சாவடி அருகே மாதவரம் சட்டப்பேரவைத் தோ்தல் அலுவலா் எம்.பெருமாள் தலைமையிலான பறக்கும் படையினா் வாகன தணிக்கையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தபோது, பொன்னேரி நோக்கிச் சென்ற வாகனத்தைத் தடுத்து நிறுத்தி ஆய்வு மேற்கொண்டனா்.

அந்த வாகனத்தில் 46 கிலோ தங்கக் கட்டிகள் எடுத்துச் சென்றது தெரிய வந்தது. இவை தனியாா் பிரபல நகைக் கடையின் தங்கக் கட்டிகள் என்பதும் தெரிய வந்தது. தங்கக் கட்டிகளை உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ால், அவற்றைப் பறிமுதல் செய்தனா். பின்னா், அவை வருமானத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாக தோ்தல் அதிகாரிகள் தெரிவித்தனா்.