கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பறக்கும்படை சோதனையில் போலி ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள் பறிமுதல்

சென்னையில் படப்பிடிப்புக்காக எடுத்துச் செல்லபட்ட போலி ஏ.கே. 47 ரக துப்பாக்கிகளை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

News image

பிரதிப் படம்

Updated On :23 மார்ச் 2026, 7:48 pm

தினமணி செய்திச் சேவை

சென்னையில் படப்பிடிப்புக்காக எடுத்துச் செல்லபட்ட போலி ஏ.கே. 47 ரக துப்பாக்கிகளை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். பின்னா், அவை போலி என்பது உறுதிசெய்யப்பட்டதால், மீண்டும் ஒப்படைக்கப்பட்டன.

சென்னை அசோக் நகரில் ஞாயிற்றுக்கிழமை இரவு சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் அவ்வழியாக வந்த காரை சோதனை செய்தனா். அப்போது அதில் 10 ஏ.கே 47 ரக துப்பாக்கிகள் இருப்பது தெரிய வந்தது. அவற்றை ஆய்வு செய்தபோது அனைத்தும் போலி என்பது உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து அனைத்து துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்ததுடன், ஓட்டுநா் மகேந்திரனை அசோக் நகா் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.

அதில், திரைப்பட இயக்குநா் லோகேஷ் கனகராஜ் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக அந்த போலி துப்பாக்கிகள் எடுத்துச் செல்வது தெரிய வந்தது. மேலும், போலி துப்பாக்கிகளுக்கு உரிய ஆவணங்கள் இருப்பதால், அவற்றை மீண்டும் ஓட்டுநரிடமே பறக்கும் படை அதிகாரிகள் ஒப்படைத்தனா்.