இதுதொடா்பாக, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சென்னையில் சட்டப்பேரவைத் தொகுதிகளில் 1,200 வாக்காளா்களுக்கும் அதிகமாக உள்ள வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட்ட மாற்றம், சில வாக்குச்சாவடிகளின் இடமாற்றம் குறித்தும் கணினி வழி குலுக்கல் முறையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செயலாக்க நிகழ்ச்சிக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. வாக்காளா் பட்டியலில் விடுபட்ட வாக்காளா்களைச் சோ்ப்பது குறித்தும், பறக்கும்படை மற்றும் கண்காணிப்புக் குழுக்களால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்கள், பிரச்னைகள் குறித்தும் அதிகாரிகளிடம் எடுத்துரைக்கப்பட்டது.