கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மாணவரைத் தாக்கியதாக தனியார் காப்பக வார்டன் மீது வழக்கு

மாமல்லபுரம் அருகே தனியார் காப்பகத்தில் தங்கிப் படித்து வந்த மாணவனை தாக்கியதாக வார்டன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

News image
Updated On :1 மார்ச் 2018, 9:51 pm

DIN

மாமல்லபுரம் அருகே தனியார் காப்பகத்தில் தங்கிப் படித்து வந்த மாணவனை தாக்கியதாக வார்டன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 
மாமல்லபுரம் அருகே குழிப்பாந்தண்டலம் கிராமப் பகுதியில் தனியார் காப்பகம் உள்ளது. இங்கு பள்ளி செல்லும் மாணவர்கள் தங்கியுள்ளனர். 
இக் காப்பகத்தில், சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த 12 வயதான 7-ஆம் வகுப்பு மாணவர் தங்கியிருந்தார். இந்நிலையில், காப்பகத்தில் உள்ள காணிக்கை உண்டியலில் திருடியதாகக் கூறி காப்பாளர் சிறுவனை புதன்கிழமை கம்பியால் அடித்ததாகக் கூறப்படுகிறது. 
இதில் மாணவனின் காலில் காயம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இந்நிலையில், தனது மகனை அடித்து காயப்படுத்தியதாகக் கூறி, சிறுவனின் தந்தை மாமல்லபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, மாமல்லபுரம் போலீஸார் வழக்குப் பதிந்து, தனியார் காப்பக வார்டன் ராபர்ட் (21) மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.